Saturday, July 7, 2012

* என் தனிமை பயணம்!!!


 


இதயம் தொலைத்த வலிகள்
இமைகளை நனைத்த துளிகள் - இன்னும்
இந்த நெஞ்சின் ஓரம்
ஈரமாகத்தான் இருக்கிறது!....
போகும் பாதை ஒவ்வொன்றிலும்
புது பூக்களாக பல பல உறவுகள்
இருந்தும் ஏதும் நிலைப்பதாக தெரியவில்லை
அவர் அவர் இடங்களில்
அவர் அவர் இறங்கிசெல்கிரார்கள்!...
காலம் தந்த காயங்களினால்
கவி எழுத கற்றுகொண்டேன்
காயங்களைதான் கரைத்துவிட
மறந்துவிட்டேன் !..
கண்கள் நனையும் நிமிடங்களில்
தலைசாய்க்க மடி ஒன்றை தேடுவேன்
ஏதும் இல்லை என்று தெரிந்ததும்
என்னை நானே தூங்கவைக்க்கிறேன் !....
என்னதான் சோகம் என்றாலும்
சொல்ல முடியா ஏதோ ஒரு சுகம்
நெஞ்சினுள்ளே சுகமாக வலிக்கிறது !...
பாசம் எனும் காற்று வீசாத
ஜென்மம் ஒன்றை வாங்கிவிட்டேன்
பாவி மனம் மண்ணுள் புதையும் வரைக்கும்
எனக்கென நானே தனிமை தீவில்
வாழ்ந்திருப்பேன்!....

           முகமட் அஸ்மி 

No comments:

Post a Comment