Wednesday, November 28, 2012

* பொன்மொழிகள்


1. தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு. - பிரையண்ட்

2. எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். - கெதே

3. அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது. - ரிரேஸ்

4. சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன.- செக்கோஸ்லோவேகியா

5. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான். - கர்னல் கீல்

* பொ‌ன்மொ‌ழிக‌ள்


01. ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவனுடைய மரணத்தின்போதுதான் தீர்மானமாகிறது.
02. இயற்கை என்னும் தாய் மார்பில் பால் குடிக்கும் தன் குழந்தையை ஒரு மார்பில் இருந்து இன்னொரு மார்பிற்கு மாற்றும் போது ஏற்படும் இடைவெளியே மரணம்.
03. வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளக் கூடாது.
04. மனிதர்கள் இறந்த பின்னர்தான் அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம்.
05. பிறப்போடு பிறந்தது மரணம்.
06. மரணம் என்பதும் வாழ்வு என்பதும் இரண்டு வேறு வேறான சங்கதிகள் அல்ல வாழ்க்கையை அனுபவிப்பதென்பது மரணத்தை அனுபவிப்பதுதான்.
07. செத்தவன் வாயில் மண் இருந்தவன் வாயில் சோறு.
08. கெட்ட செய்திகள் போல வேறு எதுவுமே வேகமாகப் பரவுவதில்லை.
09. காத்துக் கொண்டிருக்காதே நீ ஒருபோதும் செயற்படமாட்டாய்.
10. குனியாதே சுமப்பாய் நிமிர்ந்தால் உயர்வாய்.
11. நன்றி மறவாத வாழ்வு நம்மை அறியாமலே உயரும்.
12. வார்த்தைகள் அசிங்கமானால் வாழ்வும் அசிங்கமாகும்.
13. ஆழமான அறிவே அழகான வாழ்வை அமைக்கும்.
14. புத்தகம் இல்லாத வீடு சன்னல் இல்லாத இருட்டறை போன்றது.
15. துன்பத்தை மறந்தாலும் அது புகட்டிய பாடத்தை மறக்காதே.
16. ஓர்மம் ஒப்பற்ற சாதனைகளை உருவாக்கும்.
17. உருப்படியான வேலைக்கே உலகம் உன்னை அழைத்திருக்கிறது மறந்துவிடாதே.
18. அரிய சந்தர்ப்பங்கள் தேடி வரும்போது அதைப் பயன்படுத்தத் தவறாதே
19. உங்கள் நேரம் உங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவதை உணருங்கள்.
20. ஆழமான அர்த்தங்களும் அதிகமான தத்துவங்களும் அடங்கியதே வாழ்க்கை.
21. மனிதனை வெல்பவனை விட மனித மனதை வெல்பவனே மாபெரும் கெட்டிக்காரன்.
22. பிரச்சனை சிறிதாயினும் அதைத் தீர்ப்பதில் பெரிய கவனம் செலுத்து.
23. ஏமாற்றங்களை ஏற்கும் வெற்றி மனப்பான்மை எம்மை உயர்த்தும்.
24. வாழ்க்கைத்தரம் உயர்வு பெற விவேகமான வழிகாட்டல் அவசியம்.
25. ஒரு பணக்காரன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உபவாசமிருக்க வேண்டும், ஏழையாக  வாழ்ந்து இறக்க வேண்டும்.
26. எவன் ஒருவன் இருப்பதை வைத்து திருப்திப்படுகிறானோ அவனே செல்வன் ஏனென்றால் திருப்தியே உண்மையான செல்வமாகும்.
27. ஒரு முறை சேமித்த பணம் இரு முறை உழைத்ததற்கு சமம்.
28. சொர்க்கத்தில் அடிமையாக இருப்பதைவிட நரகத்தில் அரசனாக இருப்பது மேல்.
29. வார்த்தைகள் இலைகள் போல அதிக இலைகள் இருக்கும் மரத்தில் பழங்கள் இருப்பதில்லை.
30. நல்ல சொல் வெகு தூரம் பயணிக்கிறது தீய சொல் அதற்கு அப்பாலும் பயணிக்கிறது.
31. பேசிய மொழியை விழுங்க முடியாது.
32. குணப்படுத்த முடியாத நோயை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
33. மனிதனை உயர்வடையச் செய்வது சோதனை நேரம்தான், வெற்றி நேரமல்ல.
34. சோம்பலாக இருப்பது முட்டாள்கள் எடுக்கும் ஓய்வாகும்.
35. சோம்பலின் விளைவு தரித்திரம் முயற்சியின் விளைவு முன்னேற்றம்.

* நீர்



மழையில் பிறக்கிறாய்.....
மலையில் பிறக்கிறாய்.....
நிலத்தில் பிறக்கிறாய்.....

மேடு பள்ளங்களை நிறைத்தாலும் 

சமமாகத்தான் தெரிகிறாய்!

நீர் தான் 

உயிர்களின் ஆதாரம்!
எல்லா
உயிரினங்களுக்கும் ஆகாரம்!

நிற்காமல் ஓடுவதால் 

நீருக்கும் வியர்த்து போகிறது
அதனால் தான்
எல்லா நதிகளும் சங்கமிக்கும்
கடல் நீர்
கரிக்கிறது! 



* ஆண்



ஆண்

பெண்மையின் சிறப்பறிந்த
உண்மைப் பொன்னுடல் ...!

விந்தைப் பார்வையில்
வீன்னைமுட்டும் வீரம் கொண்ட
காரிருள் களை...!

வாழ்வியல் மூச்சுக்காற்று
மங்கையரின் மணிமகுடம்
மக்கட்பெயரின் மதில் சுவர் ...!

ராணியை ஆளவந்த
பட்டத்து ராஜா இந்த -உலகிற்கு ஆண் ...!

* கல்லறையே என் கருவறை

கல்லறையே என் கருவறை! - வாழ்க்கை கவிதை

மகிழ்வோடு
மறைந்திருந்தேன்
கருவறைக்குள்.

அன்னையவள் 

பொறுக்கமுடியாமல்
பிரசவித்தால்...

அன்று 

ஆரம்பித்த அழுகை
இன்றுவரை முடியவில்லை

எதையோ தேடி அலைகிறேன் 

எதுவும் கிடைக்கவில்லை...

ஒருநாள் சிரித்தால் 

ஒன்பது நாட்கள் அழுகை..

மீண்டும்.... 


மகிழ்வோடு 

மறைந்துகொண்டேன்
அதன் பேர் கல்லறையாம்!. 

* மனைவியின் அன்பைப் பெற 10 விதிகள்…

Photo: மனைவியின் அன்பைப் பெற 10 விதிகள்… 

என் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய ‘நவீன யுக மனைவி’யின் அன்பைப் பெற 10 விதிகள்…

1. மதியுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல
இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்
மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்
‘ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தைப் பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்குப் பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர்தான் அவர்களைப் பொறுத்தவரை ‘முழுமையானவர்’.

7. பேசுங்கள்
பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் ‘பங்கு கொள்ளுங்கள்’
வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்
அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது ‘வழக்கம்போல்’ இருங்கள்
எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது, ‘நீதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று ‘பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.


என் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய ‘நவீன யுக மனைவி’யின் அன்பைப் பெற 10 விதிகள்…

1. மதியுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல
இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்
மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்
‘ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தைப் பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்குப் பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர்தான் அவர்களைப் பொறுத்தவரை ‘முழுமையானவர்’.

7. பேசுங்கள்
பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் ‘பங்கு கொள்ளுங்கள்’
வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்
அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது ‘வழக்கம்போல்’ இருங்கள்
எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது, ‘நீதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று ‘பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.

Wednesday, November 21, 2012

* Parasakthi Sivaji Ganesan Court Scenes

பரம சிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

* வறுமை வந்தால் வாடாதே... வசதி வந்தால் ஆடாதே...!

Photo: Like here first -->> இன்று ஒரு தகவல். Today A Message.

வறுமை வந்தால் வாடாதே...

வசதி வந்தால் ஆடாதே...!

* மச்சத்தை வைத்து உங்கள் தலைவிதியை தெரிந்து கொள்ளலாமா!!!



அதிலும் சில மச்சங்கள் கண்ணுக்கு தெரியாத இடத்தில் இருக்கும். சிலருக்கு உடலில் மச்சமே இல்லாமல் இருக்கும். மேலும் மச்சம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் சற்று வித்தியாசமான அதிர்ஷ்டக் காற்று வீசிவிட்டால், உடனே அனைவரும் அவனுக்கு அந்த இடத்தில் மச்சம் இருப்பதால் தான், அவன் ஏதோ செய்யப் போக நல்ல அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என்று சொல்வார்கள்.
நமது முன்னோர்கள் அனைவருமே அக்காலத்தில் மச்சத்தை வைத்தே ஒரு சிலவற்றை சரியாக கணித்து சொல்வார்கள். அதேப்போலவே, வளர்ந்து பெரிய நிலைக்கு வந்த பின்னர், நமது பாட்டி, தாத்தா சொன்ன வார்த்தைகள் அனைத்தும் ஞாபகத்திற்கு வரும். இதனால் சிலர் நமது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள, பல சோதிடர்களை பார்த்து, ஜோசியம் பார்த்து, எதிர் காலத்தை தெரிந்து கொள்வார்கள்.
அதிலும் அவ்வாறு மச்சம் இருக்கும் போது எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இந்திய மற்றும் சைனீஸ் ஜோதிடம் சிலவற்றை சொல்கிறது. இதில் இப்போது முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால், எப்படி இருப்பார்கள் என்பதைப் பார்ப்போமா!!!

கண்கள்

மச்சமானது வலது கண்ணில் இருந்தால், கைகளில் எப்போதுமே பணம் இருக்கும். அதுவும் வேலையே இல்லாவிட்டாலும், பணம் கையில் எப்போதும் இருக்கும். அதுவே இடது கண்ணில் இருந்தால், அதிக திமிரு பிடித்தவர்களாக இருப்பர்.

புருவங்கள்

புருவத்திற்கு இடையில் மச்சம் இருந்தால், தலைமை பண்புகளுக்குரியவராக இருப்பர். அதுவே வலது புருவத்தில் இருந்தால், விரைவிலேயே நல்ல குணமுடையவரை திருமணம் செய்து கொள்வர். மிகவும் அதிர்ஷ்டசாலி. இடது பக்கத்தில் இருந்தால், கையில் எப்போதுமே பணம் இருக்காது, நிறைய பிரச்சனைகளை சந்திப்பர். சொல்லப்போனால் ஒரு துரதிர்ஷ்டசாலி.

காதுகள்

மச்சம் காதுகளில் எங்கிருந்தாலும், நல்ல வருமானம் இருப்பதோடு, ஆடம்பர வாழ்க்கையுடன் வாழ்வர். அதே நேரம் அந்த ஆடம்பரத்தால், மூழ்கும் நிலை கூட ஏற்படும். ஆனால் காதுகளின் பின்புறம் இருந்தால், அவர்களுக்கு வரும் வாழ்க்கைத்துணை மிகவும் பணக்காரர்களாக இருப்பர்.

மூக்கு

மூக்கின் துனியில் மச்சம் இருந்தால், எதையும் விரைவில் சிந்திக்கக்கூடியவர். மேலும் அதிக சுயமரியாதைக் கொண்டவர்கள், எப்போதும் வெற்றி பெறக்கூடியவர்கள். அந்த மச்சமே வலது பக்கத்தில் இருந்தால், சிறு முயற்சியிலேயே அதிக பணத்தை பெறுவர். அதுவே இடது புறத்தில் இருந்தால், அனைத்துமே கெட்டதாக முடியும்.

உதடுகள்

உதட்டின் மேல்புறத்தில் இருந்தால், அனைவருக்குமே நல்லவர்களாக இருப்பர். அதுமே கீழ் உதட்டில் இருந்தால், அவர்கள் நன்கு சாப்பிடுவதோடு, நடிப்பதிலும், படம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாக இருப்பர்.

கன்னம்

கன்னத்தின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், பெற்றோர்கள், கணவன், மனைவி மற்றும் உறவினர்கள் மீது மிகுந்த பாசம் இருக்கும். வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக ரசித்து நீண்ட நாட்கள் வாழ்வார்கள். அதுவே இடது கன்னத்தில் இருந்தால், வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கும். ஆனால் திருமணம் ஆனப் பின், குழந்தைகளால் பிற்காலத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பர்.

நாக்கு

நாக்கின் நுனியில் மச்சம் இருந்தால், தன் புத்திசாலித்தனத்தான பேச்சாலேயே அனைவரையும் கவர்ந்து விடுவர். மேலும் எதிர்காலம் செழிப்போடு இருக்கும். அதுவே நாக்கின் நடுவில் இருந்தால், கல்வியில் தடை, சரியான பேச்சாற்றல் இல்லாதது மற்றும் உடலில் பல பிரச்சனைகள் போன்றவை இருக்கும்.

நெற்றி

நெற்றி பெரிதாகவும், மச்சம் வலது பக்கத்திலும் இருந்தால், அது செல்வத்தை குறிக்கும். எப்போதும் சமூகத்தில் நல்ல செழிப்புள்ளவராக, நல்ல பெயர் மற்றும் செல்வாக்கோடு வாழ்வர். சிறந்த கொடை வள்ளல். ஆனால் நெற்றி குறுகலாகவும், மச்சமானது இடது பக்கத்திலும் இருந்தால், சுயநலவாதியாக, யாருக்கும் உதவி செய்யாமல், மற்றவர்களை மதிக்காமல் இருப்பர்.

Wednesday, November 14, 2012

* தத்துவம்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்...
ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு எல்லாம்
இருந்தாலும் , ரயிலேறனும் னா, ஃப்ளாட்பார த்துக்கு வந்துதான் ஆகனும் .

இதுதான் வாழ்க்கை .

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட
வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ்
ஃபிங்கர் ஆய்டாது !!!

டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.
இதுதான் உலகம்.

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??
யோசிக்கனும்............ ...!!

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !

வாழை மரம் தார் போடும்
ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது!

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,
அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும ் ,
கழித்தல் கணக்கு போடும்போது , கடன் வாங்கித்தா ன் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது .

இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... .
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது ,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது ..

உங்கள் உடம்பில் கோடிக்கணக் கான செல்கள் இருந்தாலும ்
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .

ஓடுற எலி வாலை புடிச்சா...... ...... .நீ ' கிங்'கு
ஆனா.........தூங் குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு....

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .

வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
ஆனால்............ட யர் இல்லாமல் வண்டி ஓடுமா ?

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங் னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங் கா?
இல்ல.......... பிளேன் ஓட்டுறது பிளானிங்கா ?

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்த ாலும் மெஸேஜ் Forward தான் பண்ண
முடியும்..... Rewindலாம் பண்ண முடியாது

"Tea"க்கும் "Coffee"க்கும் என்ன வித்தியாசம் ?........ "Tea"ல ஒரு "e"
இருக்கும்.
"Coffee"ல 2 "e" இருக்கும். 

* குடும்ப உளவளம்: பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்

muslim-woman

எனது கணவர் ஆண்மைத் தன்மை குறைந்தவர் போன்றே தோன்றுகிறது. திருமணம் செய்து மூன்று மாதங்களாகியும் திருப்திகரமான தாம்பத்திய வாழ்வை அனுபவிக்க முடியவில்லை. அவருக்கு இயல்பிலேயே இதில் ஆர்வம் இருப்பது போன்று தெரியவில்லை. இதை நினைக்கும்போது எனக்கு மன உளைச்சல் ஏற்படுகின்றது. எமது திருமணம் முறிந்துவிடுமோ என்ற அச்சமும் உருவாகின்றது.இது 26 வயது நிரம்பிய புதிதாக மணமுடித்த ஒரு யுவதியின் கேள்வி. இப்பிரச்சினையை அவர் முன்வைத்தபோது கவலையின் ரேகைகள் அவரது முகத்தில் அகலப் பதிந்திருந்தன. மிகுந்த மன இறுக்கத்திற்கு உட்பட்டவர் போன்றே அவரது தோற்றமும் மாறியிருந்தது. அவர் இப்பிரச்சினையை இன்னும் சற்று விரிவாக விளக்கினார்.எனது கணவர் வெளியூரைச் சேர்ந்தவர். வார நாட்களில் தொழில் நிமித்தம் அவரது சொந்த ஊரிலேயே தங்கியிருப்பார். வார இறுதி நாட்களிலேயே வீட்டுக்கு வருகிறார். ஆயினும்எனது உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் நிலையில் அவர் இல்லை. சலிப்புக்காக எதையேனும் நாம் பேசிக் கொள்கின்றோம். ஆனால்இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசுவதில்லை. பெரும்பாலும் அவருக்கு இவ்விடயத்தில் ஆர்வமில்லை என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகின்றது.திருமண வாழ்வின் இலக்குகள் பல. பெண் பாதுகாப்புசமூக சீர்கேடுகளிலிருந்து விலகியிருத்தல்,சந்ததிப் பெருக்கம்பாலின்பம்முதுமையில் பாதுகாப்பு என அதன் நோக்கங்கள் விரிந்து செல்கின்றன. இதில்தாம்பத்தியமும் முக்கியமான நோக்கமாகும். தம்பதியினர் தமக்குள் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவது போன்றுஇந்த விடயமும் கலந்துரையாடப்பட வேண்டும். ஆனால்துரதிஷ்டவசமாக கணவனின் உழைப்பும் ஓட்டமும் இதற்குப் பெரும் தடையாக உள்ளது.இக்கேள்வியை முன்வைத்த யுவதி மட்டு மன்றிஇதுபோன்ற நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளே புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். பெண்களின் இயல்பான வெட்க உணர்வும்வெளியில் சொல்வதிலுள்ள சங்கடமும் அவர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகின்றது. ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் உள்ளன. விருப்பங்கள்ஆசைகள் உள்ளன. உயிரியல் அடிப்படையிலான இத்தேவையை ஆணோ பெண்ணோ நீண்ட நாட்களுக்குப் புறக்கணிக்க முடியாது. இது மனிதனின் இயல்பான தேவைகளில் ஒன்று. எனவேஅதற்கெதிராக மனிதனால் போராடவும் முடியாது.தம்பதியினருக்கு இடையிலான உள நெருக்கம் அதிகரிக்கும் அளவுக்கு உடல் நெருக்கமும் அதிகரிக்கும். எல்லாவற்றுக்குமான அடிப்படை நிபந்தனை இருவரும் மனம் விட்டுப் பேசுவதாகும். திருமணம் முடித்து ஆரம்ப காலங்களில் இது குறித்து வெளிப்படையாகப் பேசுவது சங்கடமானதே. எனினும்சூட்சுமமாக இக்குறைபாட்டை மனைவி என்ற வகையில் உணர்த்த வேண்டும்.ஒருவரது உடல் ஆரோக்கியம்ஹோர்மோன்களின் செயற்பாடுபிறந்து வளர்ந்த கலாச்சார சூழல் ஆகிய பல்வேறு காரணிகள் ஒருவரது தாம்பத்திய வாழ்வில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இது தவிரஇப்பிரச்சினையில் முக்கிய பங்கு வகிப்பது ஒருவர் எதிர்கொண்டுள்ள உளவியல் காரணிகளே. தாம்பத்தியம் குறித்து ஒருவர் கொண்டுள்ள அபிப்பிராயங்கள்நம்பிக்கைகள்அச்சங்கள் என்பன இந்த உளவியல் காரணிகளில் உள்ளடங்குகின்றன.உடலியல் சார்ந்த காரணங்களே கணவன் தரப்பிலுள்ள பிரச்சினை என ஊகித்தால்இத்துறை சார்ந்த வைத்தியர்களை அணுகுவதன் மூலம் தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம். தற்போது இது குறித்து மருத்துவ உலகில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.ஒரு கணவன் தனது மனைவிக்கு வழங்கும் அடிப்படையான உரிமைகளில் இதுவும் ஒன்று என்ற வகையில் இத்தகைய கணவன்மார்கள் மருத்துவ உதவிகளை நாடுவது அவசியமாகும். அதன் மூலம் தனது துணைவியின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்றுவதோடுமணவாழ்வை மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றிக் கொள்ளலாம்.இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டிய இன்னொரு விடயமும் உள்ளது. இன்று பத்திரிகைகளில் இப்பிரச்சினைக்கான தீர்வாக சில வகை மாத்திரைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஏராளமான விளம்பரங்கள் வெளிவருகின்றன. இவை குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. ஏனெனில்இத்துறை சார்ந்த விஷேட மருத்துவத்துறை வளர்ந்துள்ளது. தொழின்மை ரீதியான அத்தகைய மருத்துவர்களை அணுகிஆலோசனை பெறுவதே உகந்தது.தவறும்போது இத்தகைய போலிகளுக்கு ஏமாந்துதான் இத்தகைய பலவீனமுள்ளவன் என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.கலாச்சார காரணிகளும் இப்பிரச்சினைக்குக் காரணமாகலாம். எனவேஇதற்குப் போதியளவு உளவள ஆலோசனை பெறப்பட வேண்டும். சமய அறநெறிகளுடன் கூடிய உளவள ஆலோசனைகள் இதற்குப் பெரிதும் பயன்படும்.உள ரீதியில் ஒருவர் கொண்டுள்ள பிழையான நம்பிக்கைகள் மற்றும் அப்பிராயங்களே இதற்குரிய காரணம் எனில்அதற்கும் போதியளவு உளவள ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.உண்மையில் ஒருவர் நீண்டகாலமாக ஏற்றுப் பின்பற்றி வரும் விழுமியங்களையும் பெறுமானங்களையும் ஒரேமுறையில் மாற்றியமைப்பது மிகவும் கடினமானது. நடைமுறையில் சிரம சாத்தியமானதும் கூட. ஆயினும்தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் ஒருவரது மனப்பாங்கில் மாற்றங்களைக் கொண்டு வரலாம்.வாழ்வின் யதார்த்தங்களை சிறுபிள்ளைகளிலிருந்து ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் வயது வந்ததும் இந்த உணர்வுகளையும் மதித்துச் செயற்படுவர். இல்லாதபோது ஒரு இயல்பான பலவீனமாகக் கருதிதாழ்வுச் சிக்கலை உருவாக்கிக் கொள்வர். ஒவ்வொரு கணவரும் தனது புறத்திலுள்ள பலவீனங்களைப் படிப்படியாகக் களைவதில் கவனம் செலுத்த வேண்டும். அது போன்றே மனைவியும் தன்னிடமுள்ள குறைபாடுகளை அகற்ற முயற்சிக்க வேண்டும்.உண்மையில்இதுபோன்ற உள நெருக்கடிகளை வெளியில் பகிர்ந்து கொள்வது மிகவும் சிக்கலானது. சங்கடங்கள் நிறைந்தது. ஒவ்வொரு குடும்பமும் குடும்ப மருத்துவர் ஒருவரை வைத்திருப்பது போன்று உளவள ஆலோசகரையும் அணுக வேண்டியுள்ளது. மணவாழ்வில் பலர் தோல்வியடைவதற்கும் மணமுறிவு ஏற்படுவதற்கும் இப் பிரச்சினை காரணமாகி விடக் கூடாது. மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அனேக மான பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கின்றன.எனவேமுதலில் செய்யவேண்டியது தனது கணவரோடு இவ்விடயம் குறித்து மனம் விட்டுப் பேசுவதோடுஅதை நிவர்த்திக்கத் தேவையான வழிமுறைகளில் கவனம் செலுத்துவதே. ஏனெனில்மணம் முடித்த ஆரம்ப காலங்களிலேயே இதுபோன்ற உளைச்சல்கள் ஏற்படுவது ஆரோக்கியமல்ல. அதன் தொடர்ச்சி விவாகரத்து வரை நீட்சியடையலாம் என்பதை இத்தகைய குறைபாடுள்ள தம்பதியினர் கருத்திற் கொண்டு செயற்படுவது அவசியம்.