Tuesday, May 14, 2013

* டெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்படங்களையும் விடியோக்களையும் Upload செய்து கொள்ளலாம்



உங்கள் கணணியில் டெஸ்க்டாப் திரையில் இருந்தே உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் மிக விரைவான Facebook ல் அப்லோட் செய்து கொள்ள உதவும் ஒரு மென் பொருளே bloom என்கிற ஒரு இலவச மென்பொருளாகும் .. இதன் பதிப்பு Bloom 2.9.1 இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது.. 
இந்த மென்பொருளை பயன்படுத்தி அப்லோட் செய்வதோடு டெஸ்க்டாப்பில் இருந்தே நண்பர்களுக்கு Tag செய்யவும் முடியும்,

மேலும் உங்களுடையதோ அல்லது உங்கள் நண்பர்களது புகைப்படங்களையும் வேகமாக டவுன்லோட் செய்யவும் முடிவதோடு அவர்களது அல்பத்தை தரவிறக்காமலேயே கணணி முழுத்திரையில் slideShow வாக கண்டுகளிக்கவும் முடியும்

Bloom 2.9.1 இன் வசதிகளை பெற்றுக்கொள்ள முதலில் இதனை facebook இன் மூலம் login செய்து கொள்ள வேண்டும்
  • இதற்க்கு Bloom மென்பொருளை open செய்து login என்ற பட்டனை அழுத்த கீழ் உள்ளது போல் தோன்றும்
  • பின் அதில் உள்ள login என்பதை அழுத்தியவுடன் புதிதாக உங்கள் இணைய உலாவியில் Facebook இனை login செய்யுமாறு ஒரு விண்டோ திறக்கும். கடவுள் சொல்லினை கொடுத்து login செய்தவுடன் கீழே உள்ளது போன்று request to permission கேட்கும் அதனை Allow செய்யவும்.
  •  பின் மிண்டும் உங்கள் மென்பொருளுக்கு வந்து I have successfully login என உள்ளதை அழுத்தவும்...
(இந்த செயன்முறை முதல்முறை செய்யும் போது மட்டுமே கேட்கும்.. பின்னர் login செய்யும் போது facebook user name password ஆகியவற்றை மட்டும் கொடுத்தால் போதுமானது.)

Bloom மென்பொருளை உபயோகித்து Facebook இற்கு அப்லோட் செய்தல்.

  • புகைப்படத்தை புது அல்பமாக upload செய்ய create album என்பதை அழுத்தி பின் அல்பம் பெயர் விபரத்தை கொடுத்து drag Photo or folder here என்று உள்ள இடத்தில் உங்கள் புகைப்படத்தையோ அல்லது போல்டரையோ இழுத்துவிட்டு பின் upload எனும் பட்டனை அழுத்தவும்
  • ஏற்கனவே உள்ள அல்பத்திற்க்கு புகைப்படத்தை அப்லோட் செய்ய profile - > my album என்பதை அழுத்தி குறித்த அல்பத்தை தெரிவு செய்து அதனுள் புகைப்படத்தை இழுத்து விட்டு பின் upload எனும் பட்டனை அழுத்தவும்

நண்பர்களின் புகைப்படத்தை பார்வையிட
  • நண்பர்களின் புகைப்படத்தை பார்வையிட friends என்பதை அழுத்தவும் பின் வரும் நண்பர்கள் பட்டியலில் குறித்த நண்பரை தெரிவு செய்து புகைப்படத்தை அழுத்துவன் மூலம் புகைப்படங்களை முழுத்திரையில் பார்வையிடலாம்

புகைப்படத்தை download செய்தல்
  • குறித்த அல்பத்தையோ புகைப்படத்தையோ தெரிவு செய்து பின் மேல் உள்ள மெனுவில் Action --> Download Album என்பதை அழுத்துவதன் மூலம் தரவிறக்கி கொள்ள முடியும்
Bloom 2.9.1 தறவிறக்க சுட்டி
Windows 32 bit

Windows 64 bit

* வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.




                                                         அஸ்ஸலாமு அலைக்கும்.ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.
யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்…….
உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும்
, ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.
உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.
முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.
யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.
காரணம் ஒன்றே ஒன்றுதான்!. அதுதான், அவர்கள் கல்வியை முழுமையாக கற்பதால்!!. அதுமட்டுமல்ல!!. மேலும் அவர்களுக்கு சூழ்ச்சியே தாரகமந்திரமாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது!.
கிறிஸ்தவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள்!. பிரிவுகள்!!. ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள். ஆனால் குறிக்கோள்கள் ஒன்றாகவே உள்ளது!. கல்வி நிலையங்களை தங்களின் பிடியில் வைத்திருப்பதினால் அவர்கள் மற்ற எல்லோரை விட முன்னேறி கொண்டிருகின்றனர்.
ஆனால்……!
ஒரே வேதத்தை கொண்ட இஸ்லாத்தில் ஜாதிகள், பிரிவுகள் கிடையாது!. ஆனால் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே நூற்றுகணக்கான ஜமாத்கள்!. இயக்கங்கள்!. பிரிவுகள்!. மற்றும் பிரிவினைகள்!. ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம்!!. கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக் கொண்டு இருப்பதேன்?.
தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பை கொண்ட கல்விநிலையத்தை தொடங்கி நடத்தியதுண்டா?.
ஆனால்……!
தி.க வின் கி.வீரமணி தொடங்கி, சங்கராச்சாரியார் வரை வல்லம் மற்றும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த முஸ்லிம் இயக்கமாவது அதை கண்டாவது சிந்தித்தோமா?.
அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.
உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.
ஆனால்……!
உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.
உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.
ஆனால்……!
முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே!.
கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள், 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர்.
ஆனால்……!
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை!.
கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.
ஆனால்……!
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன!.
40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.
ஆனால்……!
முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்!.
அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.
ஆனால்……!
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து, ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.
உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
ஆனால்……!
ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.
ஆனால்……!
இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.
கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.
ஆனால்…..!
1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்!.
மேற்கண்ட அணைத்து புள்ளிவிவரங்களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிகொண்டு இருக்கும் அதே வேலை, அதை காது கொடுத்து கேட்கக்கூட இவர்களுக்கு நேரம் இல்லை!. மனம் இல்லை!. அக்கறை இல்லை!!!.
யூதர்களின் கண்டுபிடிப்புக்கள் உலகை மாற்றியதில் சில:
Micro Processing Chip.- Stanley Mezor (Jewish)
Nuclear Chain Reactor – Leo Sziland (Jewish)
Optical Fiber Cable – Peter Schultz (Jewish)
Traffic Lights – Charles Adler (Jewish)
Stainless Steel – Benno Strauss (Jewish)
Sound Movies – Isador Kisee (Jewish)
Telephone Microphone – Emile Berliner (Jewish)
Video Tape Recorder – Charles Ginsburg (Jewish)
யூதர்களால் நடத்தப்படும் சிறந்த தொழில் நிறுவனங்கள்.
Polo – Ralph Lauren (Jewish)
Coca Cola – Jewish
Levi’s Jeans – Levi Strauss (Jewish)
Sawbuck’s Howard Schultz (Jewish)
Google – Sergey Brin (Jewish)
Dell Computers – Michael Dell (Jewish)
Oracle – Larry Ellison (Jewish)
DKNY – Donna Karan (Jewish)
Baskin & Robbins – Irv Robbins (Jewish)
Dunkin Donuts – Bill Rosenberg (Jewish)
உலகத்தை மீடியா மூலம் ஆட்டிப்படைக்கும் யூத மீடியாக்கள்.
Wolf Blitzer – CNN (Jewish)
Barbara Walters – ABC News (Jewish)
Eugene Meyer – Washington Post (Jewish)
Henry Grunwald – Time Magazine (Jewish)
Katherine Graham – Washington Post (Jewish)
Joseph Lelyeld – New York Times (Jewish)
எனவே முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்!. உங்களின் குழந்தைகளை, சந்ததியினரை கற்றவர்களாக மாற்ற முயலுங்கள். கல்வியை எப்போதும் முன்னெடுத்து செல்லுங்கள். முன்னேற்ற கல்வி கற்பதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் முயலவில்லை எனில், இனி உங்களின் குழந்தைகள் அவர்களாகவே முயலமாட்டார்கள்!.
எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள்!. கல்வியறிவை பெருக்குங்கள்!. பெறுங்கள்!!. உலகில் தலை சிறந்து விளங்குங்கள்!. இது ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும், தமிழக முஸ்லிம்களே நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!!. ஏனெனில் நீங்களும் உலக முஸ்லிம்களில் அடங்குவீர்கள்!!.

Monday, May 13, 2013

* சுயநலம் இல்லா உண்மைக் காதல் தான் ஜெயிக்கும்!


மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதலை சந்தித்திருப்பார்கள். விடலைப்பருவத்திலோ, பணிபுரியும் இடத்திலோ, நடுத்தர வயதிலோ
ஏதாவது ஒரு தருணத்தில் சட்டென்று காதல் உரசிப்போயிருக்கும். சட்டென்று பூக்கும் பூவைப்போல, ஒரு மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. எந்த வித நிபந்தனையும், எதிர்பார்ப்பும் இல்லாததுதான் உண்மைக்காதல் என்கின்றனர் நிபுணர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க அனுபவசாலிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சுயநலம் பார்க்காது

உண்மையான காதல் சுயநலம் பார்க்காதது. உண்மை காதலுக்கு கொடுக்கத்தான் தெரியுமே ஒழிய எதையும் எடுக்கத் தெரியாது. தான் நேசிக்கும் நபரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், அவர்களின் மனதையோ, உடலையோ ஒருபோதும் காயப்படுத்த நினைக்காது. தெய்வீகமான அன்பு இருந்தால் எத்தகைய வலிகளையும் தாங்கிக் கொள்ளும் என்கின்றனர் காதலில் மூழ்கிய அனுபவசாலிகள். எனவே உங்கள் துணையிடம் சுயநலமற்ற அன்பை செலுத்துங்கள். அப்புறம் பாருங்கள் உங்களுக்கு அந்த அன்பு இருமடங்காக கிடைக்கும்.

எதிர்பார்ப்பு அற்ற அன்பு

காதல் என்பது எந்த ஒரு எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் வருவது என்பார்கள். ஆனால் அத்தகைய காதல் ஏற்படுவது இன்றைக்கு அபூர்வமாகிவிட்டது. இன்றைக்கு பெரும்பாலான காதலர்களுக்கிடையே ஏற்படும் எதிர்பார்ப்புகள்தான் பிரச்சினைக்கு மூலகாரணமாகிறது. காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் சண்டையிட்டு பிரிவதற்கு காரணம் இத்தகைய எதிர்பார்ப்பும், நிபந்தனைகளும்தான் என்கின்றனர் நிபுணர்கள். அவ்வாறெல்லாம் இல்லை என்று நினைப்பவர்கள், உங்கள் வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் எதாவது சொல்லி, அவர்கள் செய்யாமல் இருந்து, உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் அதுவே உண்மையானக் காதல். அத்தகையவர்களது காதல் அல்லது திருமண வாழ்க்கையிலேயே எந்த ஒரு சண்டையும், பிரச்சனையும் இருக்காது.

நிபந்தனை வேண்டாமே

மனைவி அல்லது காதலியிடம் நிபந்தனை விதிப்பதை தவிருங்கள். நான் சொல்வதை நீ கேட்கவேண்டும் என்று ஆரம்பித்து ஒவ்வொரு விசயத்திலும் கட்டுப்பாடு விதிக்கப்போய் அது சிக்கலில் கொண்டு போய் விடும். எனவே நம் அன்பிற்குரியவர்கள் நாம் சொல்லும் பேச்சை கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் அவர்களை நிர்பந்திக்காமல் இருக்கவேண்டும் அதுதான் உண்மையான அன்பு.

முழுமனதோடு நேசியுங்கள்

அன்பிற்குரியவர்களை முழு மனதோடு நேசியுங்கள். அவர்களின் மனது நோகும் படியாக ஒரு வார்த்தையோ, செயலோ இருக்கவேண்டாம். அத்தகைய வார்த்தைகளும், செயல்களும்தான் அன்பிற்குரியவர்களின் மனதை நொறுக்கிவிடும். எனவே பேசும் வார்த்தைகளிலும், செய்யும் செயல்களிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

தினமும் என்னை கவனி

சின்னக்குழந்தைகளுக்கு எப்படி பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் முக்கியமோ அதைப்போலத்தான் அன்பிற்குரியவர்களும் எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஒவ்வொரு நொடியும் நம்கவனம் அவர்கள் மீதுதான் இருக்கிறது என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும். சிறிது இடைவெளி ஏற்பட்டால் சுணங்கி போய்விடுவார்கள். எனவே அன்பானவர்களை அக்கறையுடன் கவனிப்பாது காதலின் ஆழத்தை அதிகரிக்கும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
காதல் வாழ்க்கையில் இவற்றை பின்பற்றினால் அது கசந்து போகாமல் என்றைக்கும் புதிதாய் பூத்த மலராய் மணம் வீசும் என்கின்றனர் நிபுணர்கள் முயற்சித்து பாருங்களேன்.

Wednesday, May 8, 2013

* எப்போதும் ஓரிடத்தில் தங்காதது சொத்து!

எப்போதும் ஓரிடத்தில் தங்காதது சொத்து!

அன்று சொன்னது சம்பத்து எங்கள் சொத்து
இன்று சொல்லாதது சம்பத்து எங்கள் சொத்து
எப்போதும் ஓரிடத்தில் தங்காதது சொத்து
சுழலும் உலகத்தில் சொத்தும் சுழலும்
சுழலும் ஆட்சியில் சொத்தும் நழுவும்
சொத்து தேடியும் வரும் தேடாமலும் கிடைக்கும்
சொத்து தேடி வந்தால் மகிமை
சொத்து தேடாமல் வந்தால் நியதி
சொத்து நம் செயலால் அடுத்தவர் கையில்
சொத்து எங்கிருந்தாலும் மதிப்புதான்
சொத்தை சேர்க்க படும்பாடு பெரும்பாடுதான்
சொத்தை விட்டதால் படும்பாடு பெரும்பாடுதான்
சொத்தின் மகிமை சொத்து இருக்கும் போது தெரியாது
சொத்தின் மகிமை சொத்தை இழந்த பின் தெரியும்
தன்னிடம் நிற்காத சொத்தின் மீது நாட்டம்
தன்னிடம் நிற்கும் சொத்து அறச் செயலே
வளர்த்த கடா நெஞ்சில் பாயும்
வளர்த்த மனிதன் நெஞ்சை விட்டு அகல்வார்
சம்பந்தம் பேச சொத்தின் விவரம் கேட்பார்
பந்தம் முறிய சொத்தை பிடுங்குவார்
சொத்தும் வேண்டாம் சுகமும் வேண்டாம்
இருக்கும் சொத்தை தாரம் செய்வோம்

பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.-(குர்ஆன்:4:7)

நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.(குர்ஆன்:4:10.)

* பெண்கள் எதிர்பார்க்கும் வரதட்சணை

பெண்கள் எதிர்பார்க்கும் வரதட்சணை

பெண்ணே உங்கள் வருங்கால கணவர் :
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இரு
க்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும

7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),
11.கேட்ட பழக்க வழக்கம் இருக்க கூடாது அதை நிரூபிக்க ரத்த சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,

இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?

மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.


இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள். தன்னால் விடியும்.

* பணம் இருந்தால். நான் பார்க்கும் உலகம்

 

பணம் இருந்தால்.....

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித். ..

.பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம் - ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள். -வீப்பர்

. நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். - பெர்னார்ட்ஷா.

பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான். - வால்டேர்.

பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும். -ரஸ்கின்.

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும். - ஷோப்பன் ஹொபர்.

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை! - கோல்ட்டஸ்.

பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும். - ஆலிவர் வெண்டல்.

பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே. - தாமஸ் பெயின்.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும். - பிராங்க்ளின்.

பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன. - தாமஸ் புல்லர்.

பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை - டென்மார்க் பழமொழி.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை - பாரசீகப் பழமொழி.

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை - ஆஸ்திரேலியாப் பழமொழி.

* நீயா ! நானா ! நான் பார்க்கும் உலகம்

 

நீயா ! நானா !




ஆண்கள் பலசாலிகளா!
அனைத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில்லை. ஆண்களின் பலம் அவர்களது வருமானம்
அவர்களது பலவீனம் அவர்கள் அதனை செலவு செய்வது .வருமானம் அதிகமாக இருக்க கடன் கேட்பார்கள் வருமானம் குறைவாக இருப்பின் நட்பும் பாசமும் மற்றும் மற்ற தொல்லைகளும் அதிகமாகும் என்பதால் அதனை மறைத்தே வைப்பார்கள். அலைப்பாயும் மனதை மறைப்பார்கள். மறைவாக அத்தனையும் நடக்கும். hypocrite இறைபக்தி ஒழுக்கமானவன் நம்பிக்கையாளன் இத்தனையும் இவனிடம் இருப்பதாக காட்டிக் கொள்வான். தவறான செயல்களிலிருந்து தப்பிப்பதில் திறமையாளன்

பெண்கள் பலசாலிகளா!
அனைத்தையும் மற்றவர்களிடம் 'சூது வாது. தெரியாமல் பகிர்ந்துக் கொள்வார்கள். பின்பு மிகவும் வருந்துவார்கள்.
உணர்ச்சி வசப்பட்டவர்கள். அவர்கள் அதிகமாக பெறுவது அனைத்தும் தாய் வழி வந்தவை.எடுத்துச் செல்வது கணவன் வீட்டிலிருந்து. மனதில் இச்சை இருப்பினும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆண்கள் அவர்களை தொடர வேண்டும் ஆனால் ஆணுக்கு தான் அடங்கி நடப்பதாக காட்டுவதில் திறமை அதிகம் . நம்பிக்கை இருக்கும் அதில் சந்தேகமும் உள்ளடக்கம். கண்ணீர் அவர்கள் சொத்து .அந்த சொத்து பல சொத்துகளை பெற வழி வகுக்கும்
இரகசியம் காப்பது குறைவு. நடிக்கவும் தெரியும் நேர்மையாக இருக்கவும் தெரியும்.

பி . கு: அனைத்தும் உண்மையாகிவிட முடியாது . ஒருவரின் கருத்து மற்றவருடன் மாறுபடும் . விவாதத்தில் வெற்றி தோல்வி இல்லை . இது விவாதமும் அல்ல .ஒருவர் மனதை ஒருவர் விவாதத்தால் மாற்றுவது இயலாதது.
உடன் வாழ்வோர் கருத்து உடன்பட்டால் உலகம் இயங்காது . ஆய்வும் ,தத்துவமும் விஞ்ஞானத்திற்கு வழி வகுக்கும் .
இன்றைய அரசியல் நாளைய சரித்திரம் . இன்றைய ஆய்வு விஞ்ஞானத்தின் முடிவு. காயிலிருந்து பழம் வரும்.பழம் நேரடியாக வராது.
கணவனும் மனைவியும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும் தொடர்ந்து மகிழ்வாக வாழ்கிறார்கள்

* உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !

கண்கள்

கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்


என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.


டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.


கண்கள் உலர்ந்து போவது.


என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.


டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

சருமம்
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.


முகம் வீக்கமாக இருப்பது


என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.


டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.


தோல் இளம் மஞ்சளாக மாறுவது

என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.


டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.


பாதம்





கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.


டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.


பாதம் மட்டும் மரத்துப் போதல்


என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்


என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.


டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.


கைகள்

சிவந்த உள்ளங்கை


என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.


டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.


வெளுத்த நகங்கள்


என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!


ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.


டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.


விரல் முட்டிகளில் வலி


என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.


டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.


நகங்களில் குழி விழுதல்


என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.


டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.


வாய்




ஈறுகளில் இரத்தம் வடிதல்.


என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.


டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.


சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்


என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.


டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.


வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.


என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.


டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.

* நினைப்பு பொழைப்பே கெடுத்துச்சாம்!


நினைப்பு பொழைப்பே கெடுத்துச்சாம்!


நினைப்பு பொழைப்பே கெடுத்துச்சாம்!
எங்கே ஒழியப்போகிறது....!
முடிவுப் பெறுவதற்கு என்ன மூன்று மணிநேர சினிமாவா? வாழ்க்கை....!
இது தொடர் கதைதான்...! மெகா சீரியல் மாதிரி...! தொன்று தொட்டே போகும்....!
இவரைப்போன்று பல இளம் இதயங்களின் வாழ்க்கை...!



ஒழியும்!
வாய்மை, நீதியும்
உண்மையும், நேர்மையும்
பண்பாடும், கலாச்சாரமும்
பாரம்பரியம், நல்லகுடும்பம்,
கண்ணியமிக்க ஆடைகள்,
உன்னத உறவு, நட்பு
இயற்கை உணவு,
இழப்பில்லாத ஆரோக்கியமும்
போன்றவைகள் அழிந்து
கொண்டுவருகின்றன!

வளரும்!
பிராடும், பித்தலாட்டமும்
அசிங்க அலங்காரமும்,
அரைகுறை ஆடை முறையும்
ஊழலும், லஞ்சமும்
காமக்காதலும், கள்ள உறவும்
விளம்பர நம்பிக்கையும்,
ஆடம்பர வாழ்க்கையும்
பாஸ்ட்டு புட்டும்,
புதிய நோய்களும்
அறிவு வளர்ச்சியும்,
பகட்டு வாழ்க்கையும்
இன்னும் பல நம்மிடம்
வளர்ந்து வருகின்றன!

பஞ்சம் தலை
விரித்தாடியதால்
பள்ளியில் படிக்கிற
வயதில் வீதிகளில்
தலைவிரி கோலத்தோடு
கழிவு பாலிதீன் பை
பொருக்குகிறான்
குடும்பத்தில் உள்ளவர்கள்
பாதி வயிறு பசியைப்போக்க!

பஞ்சம் எப்போது தீரும்...!
நல்லோர்கள் இல்லையேல்
இனியஉலகம் வறுமையில் வாடும்.
மாற்றும் திறன் மனிதனுக்கு இல்லை
ஏழ்மையை ஒலிக்கும் வல்லமை
நம்மை படைத்தவனுக்கே...!

நீ தன்னம்பிக்கையோடு போராடு
நாளை நீ மிகப்பெரிய
சரித்திரம் படைக்கலாம்!

* கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!


1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும்.

கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.


5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.


6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

 ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.
11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள் :


1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும்

* அறியாத சில விசயங்கள் ^சராசரி மனிதனின் தகவல்கள்....


* உடல் முழுவதும் மருந்தாகும் ஆட்டிறைச்சி














மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந்து இவற்றைச் சமைக்க வேண்டும். ஆட்டின் தலை: இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும். குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். கபால பிணிகளைப் போக்கும். ஆட்டின் கண்: கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும். ஆட்டின் மார்பு: கபத்தை அறுக்கும். மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் ஆற்றும். ஆட்டின் இதயம்: தைரியம் உண்டாக்கும். மன ஆற்றலைப் பெருக்கும். இதயத்திற்குப் பலம் தரும். ஆட்டின் நாக்கு: சூட்டை அகற்றும். தோலுக்குப் பசுமை தந்து பளபளப்பாக்கும். ஆட்டின் மூளை: கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும். ஆட்டின் நுரையீரல்: உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும். ஆட்டுக் கொழுப்பு: இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும். எவ்வித இரணத்தையும் ஆற்றும். ஆட்டின் குண்டிக்காய்: இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆண் குறி பருக்கும். ஆட்டுக்கால்கள்: எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்.


* பணத்தால் செய்யமுடியாத விசயங்கள்


* தற்போதய காதல் திருமணம் கசந்து போக காரணம்


இப்போதெலாம் காதல் திருமணம் என்பது . பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தோழமை, புரிதல் மற்றும் நெருக்கம் அதிகரித்திருப்பதால் பெரும்பாலான காதல் திருமணங்கள் இருவீட்டாரின் சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துடனும் நடக்கிறது.



இது ஒரு புறமிருக்க இன்று பலரின் காதலுக்கு வில்லன்களே கிடையாது, இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும் வில்லனை எதிர்த்து காதலி கையை பிடிக்கும் சுவாரஸ்யமே தனி தான்.

முன்பெல்லாம் காதல் வயப்பட்டதும் அதை காதலியிடம் தெரிவிப்பதற்கு தனி தைரியம் வேண்டும். இப்பது நிலைமை அதற்கு எதிர்மறையாக உள்ளது. காதலன் காதலியிடம் காதலை சொல்ல மொபைல், மெயில், பேஸ்புக், சாட்டிங் என தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கைகொடுக்கின்றன.

எதுவும் ஈசியாக கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பதை போல, ஒருவரின் வாழ்வில் " காதல்" என்னும் அத்தியாயம் இருந்தது என்பதை அவர் உணர்வதற்குள் அது காணாமல் போய்விடுகிறது. இது ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் பொருந்தும்

காதலி காதலுக்கு உடனே ஓம் சொல்லிவிட்டாள், இருவருக்கும் கை நிறைய சம்பளம், பெற்றோருக்கு சம்மதம், கல்யாண வயது முடியும் தருவாய் என பலவற்றையும் காரணம் காட்டி அன்பு காதலியை அவசர மனைவியாக மாற்றிவிடுகிறார்கள்.

இவ்வாறு கைபிடிக்கும் காதலர்கள் திருமண நாள் முதல் வேறு விதமான நிதர்சன உண்மைகளை சந்திக்க நேரிடுகிறது. காதலிக்கும் வரை அன்பாகவும் பாசமாகவும் பழகிய காதலி/காதலன், திருமணதிற்கு பின் காலை முதல் மாலை வரை கோபத்தின் உச்சியில் இருப்பதுபோல தோன்றும்.

இதுவே நாளடைவில் கருத்து வேறுபாடு, சண்டை, தவறாக புரிந்துகொள்ளுதல், ஈகோ, வெறுப்பு என படிப்படியாக அதிகமாகி கடைசியில் விவாகரத்து, நிரந்தரமான பிரிவு என்னும் அளவிற்கு கொண்டுபோய் விட்டுவிடும்.

காதலிக்கும்போது உருகி உருகி காதலித்த துணையின் முகத்தை பார்க்ககூட பிடிக்காமல் போய்விடும். இதனால் இவர்கள் மட்டுமின்றி இருவரின் குடும்பத்தினரும் பாதிக்கபடுவார்கள்.

விவாகரத்து தான் சரியான தீர்வு என்னும் அளவுக்கு காதல் கசிந்து விடாமல் பார்த்துகொள்வது காதல் திருமணம் புரிந்தவர்களின் தலையாய கடமை.

திருமணத்தின் முதல் நாளிலிருந்து வாழ்கையின் இறுதிநாள் வரை அன்பு, அக்கறை, பணிவு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து வாழ்தல் போன்ற நற்குணங்களை பின்பற்றினாலே "காதல் திருமண வாழ்க்கை" சொர்க்கமாகும்.

* புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு



புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு என்று நம் எல்லோருக்கும் தெரியும் . அப்படி தெரிந்தும் புகைப்பிடிப்பவர்களை நாம் என்னவென்று சொல்வது .புகை எமக்கு பகை என்றாலும் விடுகிறார்களா ? புகை பிடிப்பதால் பல நோய்கள் வருகின்றன . சுவாசக் குழாயில் பிரச்சனைகள் எல்லாம் வருகின்றது .

எனினும் இப்போது புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும் என்று ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது . அதிக இளைஞர்கள் புகைப்பிடிக்கிறார்கள் . நாம் நீண்டகாலம் வாழ ஆசைப்படுகிறோம் என்றால் இந்த புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் . எமது ஆயுளை குறைக்கிறது , புற்றுநோய் ஏற்படுகிறது .

நாளுக்கு நாள் புகைப்பிடிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம் . சிலர் புகைப்பிடிப்பதை ஒரு சாதனையாகவும் , நாகரிகமாகவும் நினைக்கிறார்கள் . இது தவறு . நம்மையே நாமே அளிக்கின்றோம் . நமக்கு நாமே குழி தோண்டுகிறோம். மன அழுத்தத்தை அதிகரித்து மனநலப் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர் .

மாரடைப்பு , புற்றுநோய் , ஆண்மைக்குறைவு போன்ற நோய்கள் ஏற்படுகிறது புகைப்பிடிப்பதால் . புகைப்பிடிப்பவர்களுக்கு மது அருந்தும் பழக்கமும் சிலருக்கு உண்டு . சிலர் குடிப்பார்கள் புகைப்பிடிப்பதில்லை . எனினும் இரண்டும் தீங்கு தான் . இரண்டையும் அறவே கைவிட்டு சிறந்த மனிதனாக வாழ பழகுங்கள் . நோய்கள் வந்தவுடன் பின்பு யோசித்து பிரயோசனம் இல்லை . முதலே யோசிக்க வேண்டும் .

உங்களுக்கு ஏதாவது கவலை , துன்பம் இருந்தால் அதுக்கு மதுவை , புகைப்பிடிப்பதை நாடாதீர்கள் . அதுக்கு பதில் எதாவது தியானம் , உடல்பயிட்சி செய்யலாம் . நகைச்சுவை அம்சங்களை கேட்டும் , பார்த்தும் ரசிக்கலாம் . நல்ல பாடல்களை கேட்டு மகிழலாம் .

* அல்லாஹ்வின் மார்க்கம் முஸ்லிம்களை பிரிக்குமா?




‘…..இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்….” (அல்குர்ஆன் 5:3)

‘….நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்.” (அல்குர்ஆன் 3:19)

‘இஸ்லாம் அல்லாததை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான்” (அல்குர்ஆன் 3:85)

இது போன்ற பல வசனங்களில் தான் அங்கீகரித்துள்ள வாழ்க்கை வழிமுறைகளை மனித சமுதாயத்திற்கு அறிவுறுத்தவும் அதன்படி வாழ்ந்துகாட்டவும் தனது இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பினான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஏற்று அதன் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை இவ்வுலகில் அமைத்துக் கொள்ளும் அடியார்களுக்கு முஸ்லிம்கள் என்று அல்லாஹ்வே அழகிய பெயரிட்டுள்ளான்.

‘…..அவன்தான் (இதற்கு) முன்னரும், இதிலும் உங்களுக்கு முஸ்லிம்கள் என பெயரிட்டான்……” (அல்குர்ஆன் 22:78)

இன்னும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணித்து விடாதீர்கள் என்றும் நம்மை கருணையுடன் எச்சரிக்கின்றான். (பார்க்க அல்குர்ஆன் 3:102)

இத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த இஸ்லாம் எனும் அல்லாஹ்வின் மார்க்கம் பற்றியும் அதன்படி வாழ்ந்திட்ட நபி முஹம்மது(ஸல்) அவர்களின் வழிமுறைப் பற்றியும் நாம் ஒவ்வொருவரும் குர்ஆன் மூலமாக விள ங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையுள்ளவர்களாக இருக்கின்றோம். நாம் உண்மையில் அல்லாஹ்வின் மார்க்கத்தின்படி வாழ்கின்றோமா? என்று சுய பரி சோதனை செய்யத் தவறினால்! இன்னும் நாம் நல்லறங்களாக பிறர் சொல்லக் கேட்டு அல்லது பார்த்து செய்யும் அமல்கள் மார்க்கத்திற்குட்பட்டதா? ரசூல்(ஸல்) அவர்களின் வழி முறையா? என்று சுய பரிசோதனை செய்யத் தவறினால், நாம் மறுமையில் நஷ்டமடைந்தவர்களாக அல்லாஹ்வின் முன் நிற்க நேரிடும். காரணம் அல்லாஹ் தன் கட்டளைகளையும் தன் தூதரையுமே பின்பற்ற எச்சரித்துள்ளான். நம் முன்னோர்களையோ, இவ்வுலகில் அறிஞர்கள், மேதைகள் என்று அழைக்கப்படுபவர்களையோ அல்ல.

இந்தக் கட்டளைகளை முறையே நாம் உணர்ந்து கொள்ளாத காரணத்தால் ரசூல் (ஸல்) அவர்கள் வழிகாட்டிய முஸ்லிம் சமுதாயம் இன்று பல பிரிவுகளாகச் சிதறடிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் இறக்கியருளிய குர்ஆன் நம் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளாமல், அதனை நம் வீட்டு அலங்காரப் பொருளாக ஆக்கிக் கொண்டதால் இந்த இழிநிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம்.

முஸ்லிம்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் கண்களால் காண்பதையும், காண இயலாததையும், நம்மையும், இன்னும் எத்தனையோ படைப்புகளையும், பிரபஞ்சத்தையும், பிரமிக்க வைக்கும் சிறப்புடனும் நேர்த்தியுடனும் அல்லாஹ் படைத்துள்ளான். அத்தகைய ஆற்றல்மிக்க அவன் அருளிய மார்க்கத்தை பின்பற்றுவோர், இவ்வண்ணம் பல பிரிவுகளாக பிரிந்து சிறுமையடைய சாத்தியம் உண்டா? இல்லை.

முஸ்லிம்கள் தம் மார்க்கத்திற்கு சாட்சியாக இருக்கின்றார்கள் என்று அல்லாஹ் நம்மை தன் குர்ஆனில் பெருமைப்படுத்தியிருக்கும்போது அதற்கு தகுதியான நிலை நம்மிடையே உள்ளதா என்று சிந்திப்போமானால் நாம் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பது புரியும். நாம் அறிந்தோ அறியாமலோ மத்ஹப், தரீக்கா, இயக்கம், கழகம் போன்ற பிரிவுகளைப் பின்பற்றி நம்மை ரசூல்(ஸல்) அவர்கள் நிலைநிறுத்திய ஒன்றுபட்ட முஸ்லிம் ஜமாஅத்திலிருந்து பிரித்துக் கொண்டதால் நாம் வழி தவறி விட்டோம்.

மறுமை நாளில் அல்லாஹ்விடம் நான் பூமியில் வாழ்ந்திருந்த காலத்தில் ஹனஃபி யாக அல்லது ஷாஃபி, ஹம்பலி, மாலிக்கி, JAQH, TNTJ, ISM, IAC, IIM, அஹ்ல ஹதீஸ், முஜாஹித், ஸலஃபி, AQH, காதிரியா, ஷாதுலியா, நக்ஷபந்தியா, அகில இந்திய தௌஹீத் ஜமாஅத், ஒருங்கிணைந்த தௌஹீத் ஜமா அத் etc., etc..போன்ற அமைப்புகளின் கொள்கைகளை பின்பற்றிய முஸ்லிமாக வாழ்ந்தேன் என்று நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவோமா? அல்லது, என் இறைவனே உன்னுடைய குர்ஆனையும் உன் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்றி உனக்குக் கட்டுப்பட்ட முஸ்லிமாக என்னால் இயன்ற நல்லமல்களை செய்து வாழ்ந்திருந்தேன் என்று கூற விரும்புவோமா? சிந்தித்துப் பாருங்கள்.

முஹம்மது(ஸல்) அவர்களது காலத்தில் முஸ்லிம்களிடையே பொறாமை, பகைமை, நயவஞ்சகம், பதவி ஆசை, மார்க்கப்பற்றில் குறை போன்ற குணமுள்ள பலர் இருந்திருந்த போதிலும், இவை மனித வர்க்கத்தின் இயல்பு என்பதை உணர்ந்து அப்படிப்பட்டவர்களையும் அரவணைத்து ஒரே முஸ்லிம் ஜமாஅத்தாக பிரிவுகள் இல்லாமல் நபி(ஸல்) செயல்படுத்திக் காட்டினார்கள். மக்களிடையே நற்குணங்கள் வளர்வதற்கு அல்லாஹ்வைப் பற்றியும், மறுமை நாளைப் பற்றியும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவர்களாக இருந்தார்கள். இதுவே முஹம்மது(ஸல்) அவர்களின் வழிகாட்டலாக இருந்ததென்று குர்ஆனும் பல ஹதீசுகளும் எடுத்தியம்பும் உண்மை.

இன்று எத்தனையோ மார்க்க அறிஞர்கள் மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்கும் நல்லெண்ணத்தில் தங்கள் செயல்பாடுகளை ஆரம்பித்தாலும், ரசூல்(ஸல்) அவர்கள் காட்டித்தராத வழிகளில் தங்கள் மனோ இச்சைகளின்படி பல பெயர்களில் இயக்கங்களையும், கழகங்களையும், தொண்டு நிறுவனங்களையும் தோற்றுவித்து முஸ்லிம் சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி விட்டார்கள். அவர்கள் குர்ஆனையும் ஹதீஸையும் தானே சொல்கின்றார்கள் என்று நாமும் அவர்களுடன் அவர்களது கொள்கைகளை பின்பற்றியவர்களாக வாழ்கின்றோம். ஒவ்வொரு முஹல்லாவிலும் முஸ்லிம்கள் பல பிரிவுகளாக இருப்பதன் காரணம் நாம் ரசூல்(ஸல்) அவர்கள் பெயரிட்டு வலியுறுத்திய ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற கூட்டமைப்பு முறையை பின்பற்றத் தவறியதேயாகும்.

‘என் வழிமுறையை புறக்கணித்தவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரழி) ஆதாரம்: முஸ்லிம்.

நாம் மீண்டும் ஒன்றுபட்ட சமுதாயமாக மாற அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல் உள்ளது. அது, ஸஹீஹான ஹதீசாக புகாரி ஆங்கில மொழிபெயர்ப்பு 4: 803, 9: 206

நம்;மிடையே மார்க்கத்தை சரிவர அறியாதோரும், மார்க்க கடமைகளில் குறைவுள்ளோரும் இருப்பின் அவர்களிடமிருந்து நம்மை பிரித்துக் காட்ட சுன்னத் ஜமாஅத், தௌஹீத் ஜமாஅத் என்பன போன்ற பிரிவுப் பெயர்களால் நம்மை வேறுபடுத்திக் கொள்ளாமல் ஒரே ஜமாஅத்தாக இருந்து நமக்குள் மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டும், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்து கொண்டும் வாழ வேண்டும். இதுவே நபி(ஸல்) அவர்களின் வழிமுறை.

ஒவ்வொரு முஹல்லாவாசிகளின் நலனுக்காக மார்க்கப்பணிகள், இறையில்லம் பராமரிப்பு, வாழும் இடங்களின் வளர்ச்சிப் பணிகள், சமுதாய சிறார்களின் மார்க்கம் மற்றும் உலகக் கல்வி வளர்ச்சி சார்ந்த பணிகள், பைத்துல்மால் அமைத்து முறையே ஸக்காத் வசூல் செய்து உரியவர்களுக்கு கொடுத்துதவும் பணிகள் இது போன்ற மார்க்கம் அனுமதித்துள்ள எல்லாப் பணிகளையும் அழகிய முறையில் நிறைவேற்ற இயலும்.

அதை விடுத்து, ஓரு முஹல்லாவில் பல இயக்கங்களை பின்பற்றுவோரும், பல பெயர்களில் தொண்டு நிறுவனங்களும் இருப்பின் அங்கே பல கொள்கைகளை பல தலைவர்களை பின்பற்றும் நிலை ஏற்பட்டு ஜமாஅத் ஒற்றுமைக்கு வழியில்லாது போகும். அல்லாஹ்வின் நல்லடியார்களே இங்கு கூறப்பட்டிருப்பது சத்தியத்தை எடுத்துரைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்பதாலும் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்பது பலர் விளங்கிக் கொண்டிருப்பது போல் தனி பிரிவு அல்ல” அது தனி மனித சொத்து அல்ல” முஸ்லிம்கள் ஒற்றுமை யுடன் வாழ்வதற்கு அல்லாஹ் தன் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் செயல்முறை மூலம் நமக்கு காட்டித்தந்துள்ள மிகச் சிறந்த வழிமுறையே என்பதை விளக்கவேயாகும்.

இதனை சற்று சிரமப்பட்டு படித்துணருங்கள். மார்க்கத்தை நாம் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் நாமே நஷ்டமடைந்தவர்களாவோம். நமது செயல்களுக்கு மறுமை நாளில் நம்மிடமே கேள்வி கணக்கு கேட்கப்படும்” நாம் பின்பற்றும் அறிஞர்களிடமோ தலைவர்களிடமோ அல்ல.

ஒவ்வொரு காலத்திலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு (Public Awareness) காரணமாகவே அவர்களின் உரிமைகள் காக்கப்படுகின்றன. அதுபோல் மார்க்க விழிப்புணர்வு பெற ஒவ்வொருவரும் குர்ஆனை பொருள் உணர்ந்து படியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு பிறப்பித்திருக்கும்; கட்டளைகளை புரிந்து கொள்ளுங்கள். நபிவழியை ஆதாரப்பூர்வமாக அறிந்து கொள்ளுங்கள். மார்க்க அறிஞர்கள் கூறும் அறிவுரைகளை கண்மூடி பின்பற்றாமல் அவர்கள் கூறியது உண்மையா என்பதை தனியாகவோ, கூட்டாகவோ குர்ஆனில் தேடி அறிந்து கொள்ளுங்கள்.

இப்போதுள்ள இயக்க, கழக, கொள்கைத் தலைவர்கள் முஸ்லிம் சமுதாய ஒற்றுமையை உண்மையில் விரும்புபவர்களாக இருந்திருந்தால் தங்களின் வேறுபட்ட நிலைகளுக்கு ஹதீஸ்களை ஆதாரம் காட்டும் அவர்கள், ஸஹீஹான ஹதீஸாக பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிச் சென்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற பெயரில் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் செய்வதெல்லாம் மார்க்கப் பணி என்று மக்களிடம் பணம் வசூல் செய்வது, பள்ளிகள் கட்டுகிறோம் என்று வசூல் செய்து இயக்க கொள்கைப் பள்ளிகளாக ஆக்கிக் கொள்வது, இது எங்கள் கொள்கைப்பள்ளி உங்கள் பள்ளியல்ல என்று சண்டையிட்டுக் கொண்டு மாற்று மத சமூகத்திற்கு முஸ்லிம்களை கேலிக்கூத் தாக்குவது, இஸ்லாமிய ஆண்களையும் பெண்களையும் சாலை மறியல், பந்த் போன்ற நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திராத வழிகளில் போராடத் தூண்டுவது போன்ற பணிகள் தான்.

அறிஞர்கள், தலைவர்கள் ஒன்றுபடுவார்கள் என்று நாம் காத்திருந்து நம்மை மரணம் முந்திக் கொண்டால் நம் நிலை என்னாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பின் பற்றும் பிரிவுகளை விட்டு முற்றிலும் விலகி நபி(ஸல்) அவர்களின் வழியில் ஒன்றுபடுங்கள். நம் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிக்கும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.

‘அவர்களுடைய முகங்கள் நெருப்பில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ் வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே என்று கதறுவார்கள்.

மேலும் எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம்” ஆகவே அவர்கள் எங்களை வழிதவறச் செய்து விட்டார்கள்.

ஆகவே எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கை கொடுப்பாயாக! இன்னும் பெரும் சாபமாக அவர்களைச் சபிப்பாயாக!” (என்றும் கதறுவார்கள்) (அல்குர்ஆன் 33:66,67,68)

அல்லாஹ்வின் நல்லடியார்களே, அல்லாஹ் நம்மை அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தின்படி ஒன்றுபட்ட சமுதாயமாக வாழச் செய்து ஈருலக வெற்றியை நல்கு வானாக. ஆமீன்.

* முஸ்லிம்களை இழிவு சூழ்ந்து கொள்வது எதனால்?




வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் நெறிநூல். செயல்களில் சிறந்தது முகம்மது நபி (ஸல்) அவர்களின் செயல் முறை” என்ற தாரக மந்திரம் குர்ஆனிலும் ஹதீஸிலும் இருக்க முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் மேற்கண்ட தாரக மந்திரத்தை ஏற்றுக் கொள்கிறார்களே அன்றி நடைமுறைப்படுத்துவதில் புறம் காட்டி பின் வாங்கி தனது பின்னங்கால் புட்டத்தில் அடிபட ஓடவே செய்கிறார்கள்.

மேற்கண்ட தாரக மந்திரம் குர்ஆனிலும் ஹதீஸ் நூல்களிலும் விரவியே கிடக்கிறது. எனினும் மக்கள் இதன்படி செயல்படாமல் வேறு எந்த அடிப்படைகளில் “”நாங்கள் முஸ்லிம்கள்” என்று மார்தட்டிக் கொள்கிறார்கள் என்றால்

1. பிறப்பால், 2. முன்னோர்களின் கலாச்சார வழிமுறைகளால், 3. பெரும்பாலான வழிகேடர்களைப் பின்பற்றுவதால், 4. பெரியோர்கள், குருமார்களை முன்னிருத்திக் கொள்வதால் மேற் கண்ட நான்கு வழிகளில் அவர்கள் சீர்கெட்டு வழிதவறி பித்அத், குஃப்ர், ஷிர்க் என்ற பெரும் பாவங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டு ஷைத்தானிய பாதையில் சென்று இழிநிலையை அடைகிறார்கள்.

1. பிறப்பால் உயர்வா?
குறைஷ் கோத்திரத்தில் பிறந்துவிட்டதால் அபூஜஹீல் உயர்ந்தவனா? ஹபசி குலத்தில் பிறந்த பிலால்(ரழி) உயர்ந்தவர்களா? என்ற சாதாரண அறிவுகூட இல்லாத இந்த மடையர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று எவ்வாறுதான் கூறுகிறார்கள்? அரபி அஜமியைவிடவோ, அஜமி அரபியை விடவோ மேலானவன் இல்லை. யார் பயபக்தியாளர்களோ அவர்களே அல்லாஹ்வுக்கு முன் மேலானவர்கள் என்ற நபிமொழியை இவர்கள் அறியவில்லையா?

2. முன்னோர்களின் கலாச்சாரம்: நபியின் வழி முறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு “”ஆ எங்கள் பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து வந்த நடை முறை” என்று தூக்கிப் பிடிப்பவர்களுக்கு (குர்ஆனில்) “”அல்லாஹ்வின் பக்கமும் தூதரின் பக்கமும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் “இல்லை எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்ளுக்கும் போதும் என்கின்றனர். என்ன? அவர்கள் முன்னோர்கள் மூடர்களாயும் எதையும் விளங்காதவர்களாயும் இருந்தாலுமா?” (பார்க்க. 2:170,171)
என இறைவன் கேட்பது இவர்கள் காதுகளில் விழவில்லை.

3. பெரும்பாலானோரைப் பின்பற்றுதல்:
ஷைத்தான் மிகவும் சாமர்த்தியசாலி, அவன் இப்பூமியில் பெரும்பாலானோரை அவரவர் களின் வழியிலேயே சென்று அவர்களை தன் வலையில் வீழ்த்தும் மாயக்காரன். உமர்(ரழி) போன்ற விரல் விட்டு என்னும் ஒரு சிலரே அவனது வலையில் தப்பிப் பிழைப்பர். அப்படியிருக்க இப்பூமியில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள். ஆகவே அதை சரி காண்கிறேன் என்போருக்கு

“இப்பூமியில் நீங்கள் பெரும்பாலானவர்களைப் பின்பற்றி னால் அவர்கள் உங்களை வழிகெடுத்து விடு வார்கள்”(6:116) என்ற குர்ஆனின் வசனங்கள் எங்கே கண்ணில் படப்போகிறது?

4. பெரியோர்கள் குருமார்கள்:
வலிமார்கள் ஒளிமார்கள் என்று அவ்லியாக்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு சிலரும், ஞானமார்க்கம் தரீக்காவின் பாதை எனச் சொல்லிக் கொண்டு சிலரும், மத்ஹப் தப்லீக் எனச் சொல்லிக் கொண்டு சிலரும், இயக்கம் எனச் சொல்லிக் கொண்டு சிலரும், இந்த சிலரெல்லாம் யாரென்றால் “”நாங்கள் அரபி கற்ற ஆலிம்கள் நீங்களெல்லாம் அவாம்கள்” என்று ஆணவம், அகம்பாவம் பேசும் பட்டம் பெற்ற மெளலவிப் புரோகிதர்களே பெரும்பாலானோரை வழி கெடுத்ததனால் இவர்கள் மறுமையில் 33:66-68ன்படி புலம்பி நாங்கள் பலஹீனர்களாய் இருந்தோம். இவர்கள் எங்களை வழிகெடுத்ததினால் இவர்களுக்கு இருமடங்கு வேதனை கொடு என கதறும் இழிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.

நெறிநூலில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலகில் இழிவைத் தவிர வேறு கூலி கிடையாது என்றும், மறுமை நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின் பால் மீட்டப்படுவார்கள் என்றும் 2:85ல் இறைவன் கூறுகின்றான். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டி அதன்மீது நிலைக்கச் செய்வானாக!

* ஜாதிப் பித்து ஒழிய வேண்டுமா?

மனித குலத்தை ஒரு சுயநல சிறுபான்மைப் பிரிவினராகிய மதகுருமார்கள் மற்றும் அரசியல் குருமார்கள் எண்ணற்ற மதங்களாக, ஜாதிகளாக, இசங்களாக, இயக்கங்களாக, பிரிவுகளாகப் பிரித்து, அற்ப உலகியல் ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள். மதங்களை விட்டும், ஜாதிகளை விட்டும் மனித குலத்தைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று முழக்கமிட்டுச் செயல்படுகிறவர்களும் உலகியல் பட்டம், பதவி, பேர் புகழ், அற்ப உலகியல் ஆதாயங்கள் இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாலும், தங்களின் அற்பமான அறிவையே எல்லையாகக் கொண்டு செயல் படுவதாலும் அவர்களாலும் மத வேற்றுமைகளையோ, ஜாதிப் பிரிவுகளையோ ஒழிக்க முடியவில்லை.

உண்மையை உரத்துச் சொல்வதாக இருந்தால் மதவேற்றுமைகளையும், ஜாதிப் பிரிவுகளையும் ஒழித்துச் சமத்துவச் சமுதாயம் அமைய அயராது உழைத்து மறைந்த மார்க்சு, ஏங்கல்ஸ், லெனின், சிங்காரவேலர், புலே, பெரியார், அம்பேத்கர், லோகியா மட்டுமல்ல, இன்று சமத்துவ சமுதாயம் அமையவும், இன இழிவு நீங்கவும் அயராது பாடுபடுகிறவர்கள் போல் லட்சோப லட்சம் அறிஞர்கள் உழைத்தாலும், அவர்களைப் போல் கோடிக்கணக்கான அறிஞர்கள் யுக முடிவு வரை அயராது உழைத்தாலும் மத வேற்றுமைகளையோ, ஜாதிப் பித்தையோ ஒழிக்க முடியவே முடியாது.

அகிலங்கள் அனைத்தையும் படைத்து நிர்வகிக்கும் இணை, துணை இல்லாத தன்னந்தனியனான முக்காலமும் அறிந்த ஏகன் இறைவனின் முழுமை பெற்ற அறிவுடன், மனித குலத்தில் பிறந்த இப்படிப்பட்ட அனைவரின் அறிவையும் ஒன்று சேர்த்து ஒப்பிட்டாலும், அது கடலில் ஒரு ஊசியை முக்கி எடுத்தால், அந்த ஊசியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நீரை விட மிகமிக அற்பமானதே. அப்படிப்பட்ட அற்பமான அறிவை உடையவர்கள் இறைச் சட்டங்களை மிகைக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. அது வீண் முயற்சியே! மனிதர்கள் இயற்றும் நியதிகள் மனுநீதியாக இருக்குமே அல்லாமல் இறை நீதியாக ஒருபோதும் ஆகா.

இந்த உண்மையை, இந்த அறிஞர்கள் அனைவரும் ஜாதிப் பித்தை ஒழித்துச் சமத்துவச் சமுதாயம் உருவாக பலநூறு ஆண்டுகள் அயராது உழைத்தும் இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஜாதி வெறியால் உருளும் பல்லாயிரம் தலைகளும், தீக்கிரையாகும் ஆயிரக்கணக்கான வீடுகளும், விரயமாகும் கோடிக்கணக்கான பணமும் உறுதிப்படுத்தி வருகின்றன. நடுநிலைச் சிந்தனையாளர்கள் இதை மறுக்க முடியுமா? ஒருபோதும் முடியாது! ஆக ஜாதிகளை ஒழித்து, இன இழிவை நீக்கி மனித சமுதாயத்தைக் காக்க இப்பேரறிஞர்களால் முடியவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும். ஆம்! இவர்களின் முயற்சி வீண் முயற்சி!.

அதே சமயம் சில பல தலைமுறைகளுக்கு முன்னால் இன இழிவால் கூனிக் குறுகி, நாயிலும் கேடாக வாழ்ந்து வதைப்பட்டுக் கொண்டிருந்த, பள்ளு, பறை, சக்கிலி என இழித்துரைக்கப்பட்ட சமூகத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தைத் தழுவியவர்களின் வாரிசுகள்தான் இன்று இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் 98 சதவிகித முஸ்லிம்கள். அவர்கள் இஸ்லாத்தின் சிறப்பை மேன்மையை விளங்கி முஸ்லிமாகவில்லை. இன இழிவிலிருந்து விடுபட பெயரளவில் முஸ்லிம்கள் ஆனார்கள். அதாவது மதம் மாறினார்களே அல்லாமல் மனம் மாறவில்லை. அங்கு இந்து மதகுருமார்களின் தவறான போதனைகளால் மூட நம்பிக்கைகள், மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கி இருந்தது போல், இங்கும் முஸ்லிம்கள் மத குருமார்களின் தவறான போதனைகளால் மூட நம்பிக்கைகள், மூடச்சடங்கு சம்பிரதாயங்கள் இவற்றில் மூழ்கி இருக்கிறார்கள்.

இன இழிவை விட்டு விடுபட அம்பேத்கர், பெரியார் போன்றோர் இஸ்லாத்தைத் தழுவ முற்பட்டபோது, அவர்களின் ஆதரவாளர்கள், முஸ்லிம்களிடையேயும், ஹிந்துக்களிடையே காணப்படும் மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் அப்படியே காணப்படுகின்றன என்று கூறியே அவர்களைப் பின்வாங்கச் செய்தனர். அதற்கு மாறாக ஓர் உண்மையை அவர்கள் காணத் தவறிவிட்டனர். அல்லது அவர்கள் தங்கள் அற்ப இவ்வுலக ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். அதாவது மதம் மாறிய முஸ்லிம்களிடம் ஹிந்துக்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் காணப்பட்டாலும் அவர்களிடம் பல ஆயிரம் வருடங்கள் நீங்காது ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது என்பதுதான் அந்தப் பேருண்மையாகும்.

அந்தந்த இறைத் தூதர்களுக்குப் பின்னால் அந்தந்த சமூகங்களில் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு இஸ்லாம் என்ற தூய வாழ்க்கைக்குரிய நேர்வழியைக் கோணல் வழிகளாக்கி அதாவது ஹிந்து, யூத, கிறித்தவம் போன்ற பல மதங்களாக ஆக்கி மக்களை வழிகெடுத்து வயிறு வளர்க்கும் மற்ற மதங்களின் மதகுருமார்களைப் போல், இறுதித் தூதருக்குப் பின்னால் திருட்டுத்தனமாக இறுதிச் சமூகமான முஸ்லிம் சமுதாயத்தினுள்ளும் புகுந்து கொண்டுள்ள முஸ்லிம் மதகுருமார்களும் தங்களின் கற்பனைகளைப் புகுத்தி தூய இஸ்லாமிய சட்டங்களை திரித்து வளைத்து மற்ற மதங்களின் மதகுருமார்கள் போல் வயிறு வளர்த்து வருகிறார்கள்.

இந்த உண்மையை இறைவன் கொடுத்த முழுமை பெற்ற இறைவனால் பாதுகாக்கப்பட்டு வரும் இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. தங்களின் திருட்டுத் தனம் அம்பலப்பட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில்தான் குர்ஆனைப் பொருள் அறிந்து படிக்க விடாமல் தடுத்து வருகிறார்கள். இந்த அவர்களின் துர்ச்செயலே அவர்களின் அற்பப் புத்தியையும், திருட்டுத்தனத்தையும் அம்பலப்படுத்துகிறது. எனவே இம்மதகுருமார்கள் போதிப்பது தான் இஸ்லாமிய மார்க்கம் என்று ஏமாற வேண்டாம் என அயராது பாடுபடும் அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் மதகுருமார்கள் போதிக்கும் முஸ்லிம் மதச்சடங்குகளைக் காட்டி, தூய இஸ்லாத்தைத் தழுவ விரும்பும் மக்களைத் தடுக்க வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இன்னொரு உண்மையையும் உரக்கச் சொல்லித்தான் ஆக வேண்டும். எப்படி மதகுருமார்கள் கடவுளின் பெயரைச் சொல்லியே மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கிறார்களோ, அதேபோல் அரசியலின் பெயரால் மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கும் அரசியல் மதகுருமார்களும் நாட்டில் பெருத்துப் போய்தான் இருக்கிறார்கள். தங்களின் அற்ப உலகியல் ஆதாயங்களுக்காக, பதவி சுகங்களுக்காகப் பெரும்பான்மை மக்களை பலி கொடுக்கும் அற்பர்களாகவே இன்றைய அரசியல்வாதிகள் பவனி வருகிறார்கள்.

எந்தத் திட்டத்தைச் சொன்னாலும் நிறைவேற்றினாலும் அதனால் தங்களுக்கு எந்த அளவு ஆதாயம் கிடைக்கும் என்று பார்க்கிறார்களே அல்லாமல், மக்கள் நலனின் கடுகளவும் அக்கறை காட்டுவதாக இல்லை. அன்று அற்பப் புத்தியுள்ள சில மன்னர்கள் அந்நியனுக்கு வணிகத்திற்கென்று இடம் கொடுத்தார்கள். அவன் நாட்டையே அடிமைப்படுத்தி நம் நாட்டு வளங்களைக் கொள்ளை அடித்துச் சென்றான். அதேபோல் இன்றைய சுயநல ஆட்சியாளர்கள், அதே வணிகத்தின் பெயரால் அந்நியனுக்கு இடம் கொடுத்து மக்களைப் பலி கொடுத்து அவர்கள் ஆதாயம் அடைய முற்படுகிறார்கள்.

மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென்றே மத்திய, மாநில அரசுகள் என்ற நிலை போய், மத்திய, மாநில அரசுகளே பிரச்சினைக்குரியவையாகி விட்டன. ஜனநாயகம் என்றால் அது குறுக்கு வழியில் செல்வந்தர்களை மேலும் மேலும் செல்வந்தர்களாக ஆக்குவது. ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாகவே ஆக்குவது என்ற ஏமாற்றுச் சிந்தாந்தமாகும். ஜனநாயக ஆட்சி முறையைக் கடைபிடிக்கும் நாட்டு மக்களின் அவல நிலை இதை உறுதிப்படுத்துகிறது. அதற்கு மாறாக மார்க்சு, ஏங்கல்ஸ் கற்பித்த கம்யூனிச சிந்தாந்தம் நியாயமான கடும் உழைப்பில் செல்வந்தனாகும் செல்வந்தனையும் ஏழையாக்கி, ஏழை என்ற நிலையில் சமத்துவச் சமுதாயம் காண்பதாகும். இதுவும் ஒரு ஏமாற்றுச் சிந்தாந்தமே!

மனிதனைப் படைத்த இறைவன் அளித்துள்ள மிகமிக உயரிய வழிகாட்டலைத் துறந்து, மனிதன் தனது மனோ இச்சைப்படி கற்பனை செய்து கொண்டவையே எண்ணற்ற மதங்கள், ஜனநாயக ஆட்சி முறை, கம்யூனிச ஆட்சி, மன்னராட்சி முறை இவை அனைத்துமாகும். இவை ஒருபோதும் மனித குலத்திற்கு ஈடேற்றத்தையோ, சமநிலைச் சமுதாயத்தையோ தரவே தரா. எனவே மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் அனைத்து மதங்களின் மதகுருமார்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். சுய நல ஆட்சியாளர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். இறைவன் கொடுத்த இறையாட்சி நிலை நாட்டப்பட வேண்டும். இந்த இறையாட்சி 1434 வருடங்களுக்கு முன்னர் நடைமுறைப் படுத்தப்பட்டு மக்கள் ஜாதிகளற்றச் சமநிலைச் சமுதாயமாக வாழ்ந்ததும் வரலாறு கூறும் உண்மையாகும்.

தமிழகத்தில் பகுத்தறிவாளர்கள், சுய மரியாதைக்காரர்கள் என மார்தட்டிக் கொண்டு கட்சிகள், அமைப்புகள் நடத்துகிறவர்கள் மதங்களை ஒழிப்பதற்கும், ஜாதிப் பேயை விரட்டுவதற்கும் படாத பாடுபடுவதாகவும், அயராது உழைப்பதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அதே சமயம் அவர்களும் மூட நம்பிக்கைகளை வளர்ப்பதற்கும், ஜாதி வேற்றுமையை நிலைப்படுத்துவதற்கும் முற்படுகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மையாகும்.

கடவுளின் பெயரால் எண்ணற்றப் பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து, மூட நம்பிக் கைகளையும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும் வளர்த்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதகுருமார்களை மக்களுக்கு அடையாளம் காட்டி அவர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களைப் புறக்கணிக்கச் செய்து அவர்கள் கற்பனை செய்துள்ள கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை ஒழிப்பதற்கு மாறாக அகிலங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்து உணவளித்து நிர்வகித்து வரும் தன்னந்தனியனான, மனைவி மக்கள் இல்லாத, எத்தேவையுமில்லாத ஒரே இறைவனை மறுக்கும் இவர்கள் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியுமா?

ஆம்! இவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்ல என்பதை இவர்களின் அறிவற்ற செயல்பாடுகளே பறைசாற்றுகின்றன. கல்லில் செதுக்கப்பட்ட பொய்க் கடவுளான சிலைகளை செருப்பால் அடிக்கத் துணிந்தவர்கள், இன்று இவர்கள் வழிகாட்டிகளாகக் கொண்டுள்ளவர்களின் சிலைகளை நாடு முழுவதும் வடித்து அவற்றிற்கு மாலை மரியாதை செய்வது எதைக் காட்டுகிறது? அவற்றை இதய தெய்வம் என வணங்கி வழிபடுகிறவர்கள் பகுத்தறிவாளர்களா? இன்றே இந்த நிலை என்றால், இன்னும் ஓராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இவர்கள் கல்லில் சிலை செய்து மாலை மரியாதை செய்யும் இவையும் கோடிக்கணக்கான பொய்த் தெய்வங்களில் ஐக்கிய மாகிவிடும் என்பதில் ஐயமுண்டா? இப்போது சொல்லுங்கள் இவர்களும் மூட நம்பிக்கைகளையும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களை வளர்க்கிறார்களா? ஒழிக்கிறார்களா?

அன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்ட நல்லவர்களுக்குச் சிலை செய்து மாலை மரியாதை செய்ய ஆரம்பித்ததுதான் இன்று பொய்த் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்வதற்குரியவையாக ஆகிவிட்டன என்பதை உணர முடியாதவர்கள் பகுத்தறிவாளர்களா? இல்லை இவர்களும் மதவாதிகளே! அதேபோல் இன்று அரசியல் நடத்தும் ஒவ்வொரு அரசியல்வாதியும், தனது ஜாதி மக்களை ஒன்று திரட்டி ஆதாயம் அடையவும், பேர் புகழ், பட்டம், பதவி அடையும் தீய நோக்கத்துடனும் தான் செயல்படுகிறார்கள். தன் ஜாதி மக்கள் தன்னைத் தங்களின் தலைவனாக ஏற்க எப்படிப் பட்டத் தந்திரங்களைக் கையாள வேண்டுமோ அப்படிப்பட்டத் தந்திரங்களையே கையாளுகின்றனர். இன இழிவிற்கு ஆளாகி தினசரி அல்லல்படும், இழிவு படுத்தப்படும், உயிர், பொருள் நட்டத்திற்கு ஆளாகும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களின் நிலையும் இதுவே. முழுக்க முழுக்க சுயநலமே!

இவர்கள் ஜாதிகள் ஒழிக்கப்படுவதை விரும்பவில்லை. ஜாதிகள் ஒழிந்தால் இவர்கள் தலைவர்களாக இருக்க முடியாதே! ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று இவர்கள் வெற்று முழக்கமிடுகிறார்களே அல்லாமல், ஜாதி ஒழிய விரும்புவதில்லை. அதனால் தான் நேரடியாக குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் படித்து விளங்கி ஓறிறைக் கொள்கையில் உறுதி கொண்டு இஸ்லாத்தைத் தழுவ முற்படுகிறவர்களையும் தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்தப்படுகிறவர்களின் தலைவர்கள் தடுத்து வருகிறார்கள். காரணம் அவர்களின் தலைமைத்தனம் பறி போய்விடும் என்ற அச்சமே!

ஜாதி விட்டு ஜாதி மணமுடிப்பதை இத் தலைவர்களும், ஊடகங்களும் கலப்புத் திருமணம் எனச் செய்திகள் பரப்புகின்றனர். மனிதனுக்கும் மாட்டுக்குமா திருமணம் நடைபெறுகிறது? கலப்புத் திருமணம் என்று செய்தி பரப்ப? இல்லையே! மனித குலத்தில் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதை எந்த அடிப்படையில் கலப்புத் திருமணம் எனப் பறைசாற்றுகிறார்கள். இது எதைக் காட்டுகிறது. ஆம்! இவர்கள் ஜாதி வேற்றுமையை நிலைநாட்டவே விரும்புகிறார்கள். ஜாதிகள் ஒழிய விரும்பவில்லை.

ஜாதிகள் ஒழிய வேண்டுமா? ஜாதிப் பித்துத் தொலைய வேண்டுமா? ஜாதிகள் இருந்த இடம் தெரியாமல் போக வேண்டுமா? அதற்குரிய ஒரே வழி அது இறைவன் மனித குலத்திற்கென்று கொடுத்தருளியுள்ள தூய இஸ்லாத்தைத் தழுவது மட்டுமே. அதைத் தவிர்த்து நிச்சயமாக வேறு வழியே இல்லை. இதை பெரியார் அவர்களும் “”இன இழிவு ஒழிய இஸ்லாமே நன் மருந்து” என ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் பள்ளர், பறையர், சக்கிலி என இழிவு படுத்தப்பட்டதைத் தாங்க முடியாமல் மனம் மாறாமல் மதம் மாறிய கோடிக்கணக்கான முஸ்லிம்களும் இதை உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

காலஞ்சென்ற தாழை மு.கருணாநிதி இஸ்லாத்தைத் தழுவ முற்பட்டதைத் தடுத்து நிறுத்தியத் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களையும் சிலர் அறிவர். முரசொலி அடியார், அப்துல்லாஹ் அடியாராக இஸ்லாத்தை ஏற்றத்தையும் பெரியார் தாசன் இறைதாசன் என அப்துல்லாஹ்வாக இஸ்லாத்தை ஏற்றதையும் தடுக்க முற்பட்டத் தலைவர்களையும் சிலர் அறிவர்.

ஜாதி வேற்றுமையை-ஜாதிப் பித்தை முற்றாக ஒழிக்கப் பாடுபடுவதாகப் பறைசாற்றும் தாழ்த்தப் பட்ட மக்களின் அனுதாபிகளும், தலைவர்களுமான டாக்டர் கலைஞர், திரு.வீரமணி, திரு.தொல் திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, பெரியவர் நல்லக்கண்ணு, திரு.தா. பாண்டியன், திரு.எஸ்.ராஜா, திரு.ஜி.ராமகிருஷ்ணன், திரு.வைக்கோ, திரு. நெடுமாறன் மேலும் இவர்கள் போன்ற தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள், ஏகன் இறைவன் மனித குலத்திற்கென்றே இறுதியாகக் கொடுத்தருளியுள்ள தூய வாழ்க்கை நெறிநூலான அல்குர்ஆன் சொல்லும் இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவ முற்படுவதைத் தடுக்காமல், ஆர்வப்படுத்தினால், அந்த மக்களோடு பல்லாயிரம் வருடங்களாக ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாதிப் பித்து இருந்த இடம் தெரியாமல் ஒழிந்துவிடும். அவர்கள் சுதந்திர சம அந்தஸ்துள்ளவர்களாக மாறி விடுவார்கள். இது நிச்சயத்திலும் நிச்சயம்!

இத்தலைவர்கள் அழிந்துபடும் அற்பமான இவ்வுலகின் பதவி சுகம், சொத்து சுகம், பேர் புகழ் சுகம் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், இன இழிவால் நாயை விடக் கேவலமாக கருதப்படும் மக்களின் ஈருலக ஈடேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட முன்வந்தால் அது மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும். தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகமே வியந்துப் போற்றும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மனிதக் குலத்தைப் பீடித்திருக்கும் அனைத்துப் பீடைகளும் அகல வழி பிறக்கும்.

புரோகித முல்லாக்களின் வசீகர வலையில் சிக்காமல் குர்ஆனை நேரடியாகத் தங்கள் மொழிகளில் படித்து விளங்குகிறவர்கள் சாரை சாரையாக இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தூய இஸ்லாம் வேகமாகப் பரவுகிறது. அதைக் கண்டு பொறுக்க முடியாமல், யூத, கிறித்தவ மதகுருமார்கள், குர்ஆனின் மீதும், இறுதி இறைத் தூதர் மீதும் புழுதிவாரி இறைத்துத் தங்கள் அரிப்பைத் தீர்த்து வருகின்றனர்.

மீண்டும் உறுதியாகச் சொல்கிறோம்:
உண்மையில் தங்களின் அற்ப உலகியல் ஆதாயங்களை விடத் தங்களை நம்பியுள்ள தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்தப்படும் பெரும்பான்மை மக்களின் நலனில் அக்கறை உள்ள தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்று தங்களை நம்பியுள்ள மக்களையும் தூய இஸ்லாத்தில் இணையச் செய்வதே இன இழிவு நீங்கி ஈடேற்றம் பெற உள்ள ஒரே வழியாகும். தாழ்த்தப் பட்ட மக்களின் தலைவர்கள் உணர்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். இறைவன் அருள் புரிவானாக.