Tuesday, May 7, 2013

* பொறுமையைக் கொண்டு வெற்றியடைவோம்!

அல்லாஹ் கூறுகிறான்:

இறைவிசுவாசிகளே பொறுமையாக இருங்கள். இன்னலைச் சகித்துக்கொள்ளுங்கள். 
அல்குர்ஆன் : 3 : 200.

உங்களை நாம் பசி, பயம், சொத்து, உயிர், விளைச் சல் ஆகியவற்றின் மூலம் சோதிப்போம். பொறுமை யாளர்களுக்கு சுபசெய்தி கூறுவீராக.
அல்குர்ஆன் (39:10).

பொறுமையாளர்களின் கூலியை கணக்கின்றி கொடுப்பேன்.
அல்குர்ஆன் 2:155.

இறைவிசுவாசிகளே! நீங்கள் பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
அல்குர்ஆன் 2:153.

அருட்கொடைகளில் சிறந்த ஒன்று பொறுமை. பொறுமை என்ற ஒரு பண்பு இல்லை எனில் மனித னால் எந்த ஒரு நல்லறத்தையும் செய்ய முடியாது. உதாரணமாக, தொழுகையை எடுத்துக்கொள்ளலாம். இறைவனின் கட்டளையான தொழுகையை நிறைவேற் றுவதற்கும் பொறுமை அவசியம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொருட்கள் கேட்கப்பட்டது. திரும்பத் திரும்பக் கொடுக்கப்பட்டது. எதுவரை எனில், முழுவதும் காலி யாகும் வரை. நம்முடைய எண்ணம் எதுவாக இருக் குமோ அதுபோலவே அல்லாஹ் அவனை வைத்திருக் கின்றான். (உதவுபவனாக, உதவி வேண்டுபவனாக, கொடுப் பவனாக, பொறுமையாளனாக, கோபப்படுபவனாக). (நூல் : முஸ்லிம் 1053)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சாதாரண ஒரு மனிதனுக்கும் இறை நம்பிக் கையாளனுக்கும் கண்டிப்பாக வேறுபாடு இருக்கும். ஏனெனில் அவனுக்கு மகிழ் ச்சியான நிலை ஏற்பட்டால் அல்லாஹ்விற்கு நன்றி கூறுவான். அது அவனுக்கு நல்ல தாகிவிடுகிறது. அவனுக்கு தீங்கு ஏற்பட்டால் பொறுமையாக இருக்கிறான். அதுவும் அவனுக்கு நல்லதாகி விடுகிறது. (நூல் : முஸ்லிம் 2999)

அல்லாஹ்வின் அருளும் அவனது சாந் தியும் அந்த நபிமார்கள் மீது உண்டாகட்டு மாக. ஒரு நபியை அந்த சமூகத்தினர் ரத்தம் சிந்த சிந்த அடித்தார்கள். அவர் தன் முகத்தில் ரத்தத்தை துடைத்தவாறு, இறைவா எனது இந் தக் கூட்டத்தை மன்னித்துவிடு என்று பிரார்த் தனை செய்தார்.

நிச்சயமாக அவர்கள் அறியாதவராக இருக்கிறார்கள் என்று ஒரு சம்பவத்தை சஹா பிகளுக்கு நபி (ஸல்) சொன்னார்கள். மேற்கண்ட ஹதீஸ்களாலும் குர்ஆன் ஆயத்களினாலும் மனிதனின் வாழ்க்கையில் பொறுமை மிகவும் அவசியமாக உள்ளது என் பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஆகவே, இனிவரும் காலத்திலேனும் அனைவரும் பொறுமையுடன் இருந்து அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்ப்போம்.

No comments:

Post a Comment