விளங்க முடியாத ஒன்று என் அம்மா உன் அன்பினை மட்டுமே என்னால் விளங்கவும் முடியவில்லை மறுக்கவும் முடியவில்லை உலகிலுள்ள ஒவ்வொன்றும் ஒன்றையொன்றை எதிர்ப்பார்த்தே விரும்புகின்றது நேசிக்கின்றது வருகின்றது போகின்றது அணைக்கின்றது அரவனைக்கின்றது கண்டிக்கின்றது தண்டிக்கின்றது ஆனால் நீ மாத்திரமே எதையுமே நோக்காமல் என்னை சுமந்தாய் என்னை நேசித்தாய் என்வாழ்வினை விரும்பினாய் என்னை காக்கின்றாய் என்னை கண்டித்தாய் அணைத்தாய் அரவனைத்தாய் உம் அன்பினால் என்னைக் கட்டிப் போட்டாய் நானுன்னை கோபத்தில் வெறுத்தாலும் உந்தன் அன்பினால் அணைத்தாய் உன் மரணத் தருவாயிலும் உன்னைப் பற்றியல்ல என் எதிர்காலம் குறித்து நினைக்கும் மனம் உனக்கெப்படி வந்தது தாயே...................... |
No comments:
Post a Comment