Tuesday, July 3, 2012

* காதல்....

 
உன்னழகைக் காட்டுதடி
எண்ணமெனும் தேன்கூட்டில்
இன்பக் கனல் மூட்டுதடி!

வான நிலாப்பெண்ணை
வட்டமிட்டு மேகமொன்று
மோன முகத்தினிலே
முத்தமிட்டுப் போகுதடி!

துள்ளிவிழும் நீரலையில்
வெள்ளிமலர் பூத்ததடி
வள்ளியுனை எதிர்பார்த்த
மெல்லுடலும் வேர்த்ததடி!

இல்லத்தில் நீயிருந்தால்
இருள்வர அஞ்சுதடி
மெல்லத் தமிழ்உனது
சொல்லில் வந்து கொஞ்சுதடி (மின்னும்)


                                                              எழுதியவர் :பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 

No comments:

Post a Comment