Wednesday, July 25, 2012

* காண்பதெல்லாம் இன்பமப்பா!



விதியென்னும் குழந்தை கையில் 
உலகந்தன்னை 
விளையாடக் கொடுத்துவிட்டாள் 
இயற்கையன்னை - அது 
விட்டெறியும் உருட்டிவிடும் 
மனிதர் வாழ்வை 
மேல் கீழாய்ப் புரட்டிவிடும் 
வியந்திடாதே 

மதியுண்டு கற்புடைய 
மனைவியுண்டு 
வலிமையுண்டு வெற்றி தரும் 
வருந்திடாதே 
எதிர்த்து வரும் துன்பத்தை 
மிதிக்கும் தன்மை 
எய்திவிட்டால் காண்பதெல்லாம் 
இன்பமப்பா



No comments:

Post a Comment