Thursday, July 26, 2012

* செல்லமே!


செல்லமே! 

உன் 

இதயச்சிறையில் 
இன்னும் பல்லாண்டு 
சிறை வை.

காந்தக் கண்களால்
மீண்டும் மீண்டும்
கைது செய்.

வார்த்தைகளால்
வதை செய்.
பரவாயில்லை

ஈரமில்லாமல் நட
ஏனென்று
கேட்கமாட்டேன்.

கனவுகளையெல்லாம்
கலைத்துப் போடு.
கலங்கமாட்டேன்.

உண்ண எதுவுமே தராதே!
பசித்திருப்பேன்.
உயிருள்ளவரை உறங்க விடாதே!
விழித்தே இருப்பேன்.

தாகத்திற்கு தண்ணீர் கூட தராதே!
நாவறண்டு துடித்தாலும்
உயிரோடிருப்பேன்.

என்
சோகத்தில் கூட
சேர்ந்து அழாதே!
உனக்காகவும்
நானே அழுவேன்.

இதயத்தில் இடமில்லை
என்று சொல்!
ஏற்றுக் கொள்வேன்.

சிலுவையில் ஏற்றி
பல நூறு முறை
ஆணி அடி.
அப்போதும் சிரிப்பேன்
உனக்காக

ஆனால்
அன்பே
நீ மட்டும்
புன்னகைக்க மறக்காதே! 
இந்தச்
சிறைப்பறவைக்கு
உன்
புன்னகையால் மட்டும்
சுவாசம் கொடு.

உன்னைச் சுவாசித்தபடி
இன்னும் நூறாண்டு
வாழவேண்டும்.

No comments:

Post a Comment