Tuesday, July 17, 2012

* பெண்ணே உனக்கு நீயே சுமையா?



பெண்ணே உனக்கு நீயே சுமையா?
வீட்டை விட்டு புறப்படும் பெண்ணே!
நீ அழகாய் இருக்க வேண்டும் என்பதற்காக
எத்தனை பெரிய சுமையை
...ஏற்றிக் கொள்கிறாய் தெரியுமா?
நீ போடும் அத்தன ஒப்பனையும்
உன்னை கட்டுப்படுத்துவதை நீ உணர்வாயா?
கண்களுக்கு தீட்டிய மை கரையாமல் . .
உதட்டின் சாயம் சிதையாமல் . . .
சீவிக் கட்டிய கூந்தல் கலையாமல் . .
விலை உயர்ந்த சேலை கசங்காமல்
இன்னும் சன நெரிசலில் நீ அணியும்
அலங்காரப் பொருட்கள் தவறிப் போகாமல்
எத்தனை கவனம் எடுக்க வேண்டி இருக்கிறது பார்த்தாயா?
ஆண்களின் ஆதிக்கத்தை நீ வெறுப்பதை ஆதரிக்கும் நான்
அலங்காரத்தின் ஆதிக்கத்தை ஏற்றுகொள்ளும்
உனது அறியாமையை நான் ஆதரிக்கவா மறுக்கவா?
பதில் தருவாயா?

No comments:

Post a Comment