Saturday, June 30, 2012

* மௌனமே பார்வையாய் ...



மௌனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாடவேண்டும் 
நாணமே ஜாடையாய் ஒரு வார்த்தை பேசவேண்டும்  


 அல்லிக்கொடியே உன் முல்லை இதழும்  
தேனாறு போலப் பொங்கி வர வேண்டும்  
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் -  என்னை  
அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும் 


 முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் 
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்  
முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் - பல  
மொழிகள் பாடம் பெற வரவேண்டும்

No comments:

Post a Comment