Tuesday, May 14, 2013

* டெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்படங்களையும் விடியோக்களையும் Upload செய்து கொள்ளலாம்



உங்கள் கணணியில் டெஸ்க்டாப் திரையில் இருந்தே உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் மிக விரைவான Facebook ல் அப்லோட் செய்து கொள்ள உதவும் ஒரு மென் பொருளே bloom என்கிற ஒரு இலவச மென்பொருளாகும் .. இதன் பதிப்பு Bloom 2.9.1 இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது.. 
இந்த மென்பொருளை பயன்படுத்தி அப்லோட் செய்வதோடு டெஸ்க்டாப்பில் இருந்தே நண்பர்களுக்கு Tag செய்யவும் முடியும்,

மேலும் உங்களுடையதோ அல்லது உங்கள் நண்பர்களது புகைப்படங்களையும் வேகமாக டவுன்லோட் செய்யவும் முடிவதோடு அவர்களது அல்பத்தை தரவிறக்காமலேயே கணணி முழுத்திரையில் slideShow வாக கண்டுகளிக்கவும் முடியும்

Bloom 2.9.1 இன் வசதிகளை பெற்றுக்கொள்ள முதலில் இதனை facebook இன் மூலம் login செய்து கொள்ள வேண்டும்
  • இதற்க்கு Bloom மென்பொருளை open செய்து login என்ற பட்டனை அழுத்த கீழ் உள்ளது போல் தோன்றும்
  • பின் அதில் உள்ள login என்பதை அழுத்தியவுடன் புதிதாக உங்கள் இணைய உலாவியில் Facebook இனை login செய்யுமாறு ஒரு விண்டோ திறக்கும். கடவுள் சொல்லினை கொடுத்து login செய்தவுடன் கீழே உள்ளது போன்று request to permission கேட்கும் அதனை Allow செய்யவும்.
  •  பின் மிண்டும் உங்கள் மென்பொருளுக்கு வந்து I have successfully login என உள்ளதை அழுத்தவும்...
(இந்த செயன்முறை முதல்முறை செய்யும் போது மட்டுமே கேட்கும்.. பின்னர் login செய்யும் போது facebook user name password ஆகியவற்றை மட்டும் கொடுத்தால் போதுமானது.)

Bloom மென்பொருளை உபயோகித்து Facebook இற்கு அப்லோட் செய்தல்.

  • புகைப்படத்தை புது அல்பமாக upload செய்ய create album என்பதை அழுத்தி பின் அல்பம் பெயர் விபரத்தை கொடுத்து drag Photo or folder here என்று உள்ள இடத்தில் உங்கள் புகைப்படத்தையோ அல்லது போல்டரையோ இழுத்துவிட்டு பின் upload எனும் பட்டனை அழுத்தவும்
  • ஏற்கனவே உள்ள அல்பத்திற்க்கு புகைப்படத்தை அப்லோட் செய்ய profile - > my album என்பதை அழுத்தி குறித்த அல்பத்தை தெரிவு செய்து அதனுள் புகைப்படத்தை இழுத்து விட்டு பின் upload எனும் பட்டனை அழுத்தவும்

நண்பர்களின் புகைப்படத்தை பார்வையிட
  • நண்பர்களின் புகைப்படத்தை பார்வையிட friends என்பதை அழுத்தவும் பின் வரும் நண்பர்கள் பட்டியலில் குறித்த நண்பரை தெரிவு செய்து புகைப்படத்தை அழுத்துவன் மூலம் புகைப்படங்களை முழுத்திரையில் பார்வையிடலாம்

புகைப்படத்தை download செய்தல்
  • குறித்த அல்பத்தையோ புகைப்படத்தையோ தெரிவு செய்து பின் மேல் உள்ள மெனுவில் Action --> Download Album என்பதை அழுத்துவதன் மூலம் தரவிறக்கி கொள்ள முடியும்
Bloom 2.9.1 தறவிறக்க சுட்டி
Windows 32 bit

Windows 64 bit

* வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.




                                                         அஸ்ஸலாமு அலைக்கும்.ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.
யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்…….
உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும்
, ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.
உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.
முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.
யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.
காரணம் ஒன்றே ஒன்றுதான்!. அதுதான், அவர்கள் கல்வியை முழுமையாக கற்பதால்!!. அதுமட்டுமல்ல!!. மேலும் அவர்களுக்கு சூழ்ச்சியே தாரகமந்திரமாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது!.
கிறிஸ்தவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள்!. பிரிவுகள்!!. ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள். ஆனால் குறிக்கோள்கள் ஒன்றாகவே உள்ளது!. கல்வி நிலையங்களை தங்களின் பிடியில் வைத்திருப்பதினால் அவர்கள் மற்ற எல்லோரை விட முன்னேறி கொண்டிருகின்றனர்.
ஆனால்……!
ஒரே வேதத்தை கொண்ட இஸ்லாத்தில் ஜாதிகள், பிரிவுகள் கிடையாது!. ஆனால் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே நூற்றுகணக்கான ஜமாத்கள்!. இயக்கங்கள்!. பிரிவுகள்!. மற்றும் பிரிவினைகள்!. ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம்!!. கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக் கொண்டு இருப்பதேன்?.
தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பை கொண்ட கல்விநிலையத்தை தொடங்கி நடத்தியதுண்டா?.
ஆனால்……!
தி.க வின் கி.வீரமணி தொடங்கி, சங்கராச்சாரியார் வரை வல்லம் மற்றும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த முஸ்லிம் இயக்கமாவது அதை கண்டாவது சிந்தித்தோமா?.
அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.
உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.
ஆனால்……!
உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.
உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.
ஆனால்……!
முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே!.
கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள், 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர்.
ஆனால்……!
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை!.
கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.
ஆனால்……!
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன!.
40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.
ஆனால்……!
முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்!.
அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.
ஆனால்……!
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து, ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.
உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
ஆனால்……!
ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.
ஆனால்……!
இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.
கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.
ஆனால்…..!
1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்!.
மேற்கண்ட அணைத்து புள்ளிவிவரங்களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிகொண்டு இருக்கும் அதே வேலை, அதை காது கொடுத்து கேட்கக்கூட இவர்களுக்கு நேரம் இல்லை!. மனம் இல்லை!. அக்கறை இல்லை!!!.
யூதர்களின் கண்டுபிடிப்புக்கள் உலகை மாற்றியதில் சில:
Micro Processing Chip.- Stanley Mezor (Jewish)
Nuclear Chain Reactor – Leo Sziland (Jewish)
Optical Fiber Cable – Peter Schultz (Jewish)
Traffic Lights – Charles Adler (Jewish)
Stainless Steel – Benno Strauss (Jewish)
Sound Movies – Isador Kisee (Jewish)
Telephone Microphone – Emile Berliner (Jewish)
Video Tape Recorder – Charles Ginsburg (Jewish)
யூதர்களால் நடத்தப்படும் சிறந்த தொழில் நிறுவனங்கள்.
Polo – Ralph Lauren (Jewish)
Coca Cola – Jewish
Levi’s Jeans – Levi Strauss (Jewish)
Sawbuck’s Howard Schultz (Jewish)
Google – Sergey Brin (Jewish)
Dell Computers – Michael Dell (Jewish)
Oracle – Larry Ellison (Jewish)
DKNY – Donna Karan (Jewish)
Baskin & Robbins – Irv Robbins (Jewish)
Dunkin Donuts – Bill Rosenberg (Jewish)
உலகத்தை மீடியா மூலம் ஆட்டிப்படைக்கும் யூத மீடியாக்கள்.
Wolf Blitzer – CNN (Jewish)
Barbara Walters – ABC News (Jewish)
Eugene Meyer – Washington Post (Jewish)
Henry Grunwald – Time Magazine (Jewish)
Katherine Graham – Washington Post (Jewish)
Joseph Lelyeld – New York Times (Jewish)
எனவே முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்!. உங்களின் குழந்தைகளை, சந்ததியினரை கற்றவர்களாக மாற்ற முயலுங்கள். கல்வியை எப்போதும் முன்னெடுத்து செல்லுங்கள். முன்னேற்ற கல்வி கற்பதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் முயலவில்லை எனில், இனி உங்களின் குழந்தைகள் அவர்களாகவே முயலமாட்டார்கள்!.
எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள்!. கல்வியறிவை பெருக்குங்கள்!. பெறுங்கள்!!. உலகில் தலை சிறந்து விளங்குங்கள்!. இது ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும், தமிழக முஸ்லிம்களே நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!!. ஏனெனில் நீங்களும் உலக முஸ்லிம்களில் அடங்குவீர்கள்!!.

Monday, May 13, 2013

* சுயநலம் இல்லா உண்மைக் காதல் தான் ஜெயிக்கும்!


மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதலை சந்தித்திருப்பார்கள். விடலைப்பருவத்திலோ, பணிபுரியும் இடத்திலோ, நடுத்தர வயதிலோ
ஏதாவது ஒரு தருணத்தில் சட்டென்று காதல் உரசிப்போயிருக்கும். சட்டென்று பூக்கும் பூவைப்போல, ஒரு மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. எந்த வித நிபந்தனையும், எதிர்பார்ப்பும் இல்லாததுதான் உண்மைக்காதல் என்கின்றனர் நிபுணர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க அனுபவசாலிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சுயநலம் பார்க்காது

உண்மையான காதல் சுயநலம் பார்க்காதது. உண்மை காதலுக்கு கொடுக்கத்தான் தெரியுமே ஒழிய எதையும் எடுக்கத் தெரியாது. தான் நேசிக்கும் நபரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், அவர்களின் மனதையோ, உடலையோ ஒருபோதும் காயப்படுத்த நினைக்காது. தெய்வீகமான அன்பு இருந்தால் எத்தகைய வலிகளையும் தாங்கிக் கொள்ளும் என்கின்றனர் காதலில் மூழ்கிய அனுபவசாலிகள். எனவே உங்கள் துணையிடம் சுயநலமற்ற அன்பை செலுத்துங்கள். அப்புறம் பாருங்கள் உங்களுக்கு அந்த அன்பு இருமடங்காக கிடைக்கும்.

எதிர்பார்ப்பு அற்ற அன்பு

காதல் என்பது எந்த ஒரு எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் வருவது என்பார்கள். ஆனால் அத்தகைய காதல் ஏற்படுவது இன்றைக்கு அபூர்வமாகிவிட்டது. இன்றைக்கு பெரும்பாலான காதலர்களுக்கிடையே ஏற்படும் எதிர்பார்ப்புகள்தான் பிரச்சினைக்கு மூலகாரணமாகிறது. காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் சண்டையிட்டு பிரிவதற்கு காரணம் இத்தகைய எதிர்பார்ப்பும், நிபந்தனைகளும்தான் என்கின்றனர் நிபுணர்கள். அவ்வாறெல்லாம் இல்லை என்று நினைப்பவர்கள், உங்கள் வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் எதாவது சொல்லி, அவர்கள் செய்யாமல் இருந்து, உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் அதுவே உண்மையானக் காதல். அத்தகையவர்களது காதல் அல்லது திருமண வாழ்க்கையிலேயே எந்த ஒரு சண்டையும், பிரச்சனையும் இருக்காது.

நிபந்தனை வேண்டாமே

மனைவி அல்லது காதலியிடம் நிபந்தனை விதிப்பதை தவிருங்கள். நான் சொல்வதை நீ கேட்கவேண்டும் என்று ஆரம்பித்து ஒவ்வொரு விசயத்திலும் கட்டுப்பாடு விதிக்கப்போய் அது சிக்கலில் கொண்டு போய் விடும். எனவே நம் அன்பிற்குரியவர்கள் நாம் சொல்லும் பேச்சை கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் அவர்களை நிர்பந்திக்காமல் இருக்கவேண்டும் அதுதான் உண்மையான அன்பு.

முழுமனதோடு நேசியுங்கள்

அன்பிற்குரியவர்களை முழு மனதோடு நேசியுங்கள். அவர்களின் மனது நோகும் படியாக ஒரு வார்த்தையோ, செயலோ இருக்கவேண்டாம். அத்தகைய வார்த்தைகளும், செயல்களும்தான் அன்பிற்குரியவர்களின் மனதை நொறுக்கிவிடும். எனவே பேசும் வார்த்தைகளிலும், செய்யும் செயல்களிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

தினமும் என்னை கவனி

சின்னக்குழந்தைகளுக்கு எப்படி பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் முக்கியமோ அதைப்போலத்தான் அன்பிற்குரியவர்களும் எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஒவ்வொரு நொடியும் நம்கவனம் அவர்கள் மீதுதான் இருக்கிறது என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும். சிறிது இடைவெளி ஏற்பட்டால் சுணங்கி போய்விடுவார்கள். எனவே அன்பானவர்களை அக்கறையுடன் கவனிப்பாது காதலின் ஆழத்தை அதிகரிக்கும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
காதல் வாழ்க்கையில் இவற்றை பின்பற்றினால் அது கசந்து போகாமல் என்றைக்கும் புதிதாய் பூத்த மலராய் மணம் வீசும் என்கின்றனர் நிபுணர்கள் முயற்சித்து பாருங்களேன்.

Wednesday, May 8, 2013

* எப்போதும் ஓரிடத்தில் தங்காதது சொத்து!

எப்போதும் ஓரிடத்தில் தங்காதது சொத்து!

அன்று சொன்னது சம்பத்து எங்கள் சொத்து
இன்று சொல்லாதது சம்பத்து எங்கள் சொத்து
எப்போதும் ஓரிடத்தில் தங்காதது சொத்து
சுழலும் உலகத்தில் சொத்தும் சுழலும்
சுழலும் ஆட்சியில் சொத்தும் நழுவும்
சொத்து தேடியும் வரும் தேடாமலும் கிடைக்கும்
சொத்து தேடி வந்தால் மகிமை
சொத்து தேடாமல் வந்தால் நியதி
சொத்து நம் செயலால் அடுத்தவர் கையில்
சொத்து எங்கிருந்தாலும் மதிப்புதான்
சொத்தை சேர்க்க படும்பாடு பெரும்பாடுதான்
சொத்தை விட்டதால் படும்பாடு பெரும்பாடுதான்
சொத்தின் மகிமை சொத்து இருக்கும் போது தெரியாது
சொத்தின் மகிமை சொத்தை இழந்த பின் தெரியும்
தன்னிடம் நிற்காத சொத்தின் மீது நாட்டம்
தன்னிடம் நிற்கும் சொத்து அறச் செயலே
வளர்த்த கடா நெஞ்சில் பாயும்
வளர்த்த மனிதன் நெஞ்சை விட்டு அகல்வார்
சம்பந்தம் பேச சொத்தின் விவரம் கேட்பார்
பந்தம் முறிய சொத்தை பிடுங்குவார்
சொத்தும் வேண்டாம் சுகமும் வேண்டாம்
இருக்கும் சொத்தை தாரம் செய்வோம்

பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.-(குர்ஆன்:4:7)

நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.(குர்ஆன்:4:10.)

* பெண்கள் எதிர்பார்க்கும் வரதட்சணை

பெண்கள் எதிர்பார்க்கும் வரதட்சணை

பெண்ணே உங்கள் வருங்கால கணவர் :
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இரு
க்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும

7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),
11.கேட்ட பழக்க வழக்கம் இருக்க கூடாது அதை நிரூபிக்க ரத்த சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,

இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?

மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.


இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள். தன்னால் விடியும்.

* பணம் இருந்தால். நான் பார்க்கும் உலகம்

 

பணம் இருந்தால்.....

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித். ..

.பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம் - ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள். -வீப்பர்

. நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். - பெர்னார்ட்ஷா.

பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான். - வால்டேர்.

பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும். -ரஸ்கின்.

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும். - ஷோப்பன் ஹொபர்.

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை! - கோல்ட்டஸ்.

பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும். - ஆலிவர் வெண்டல்.

பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே. - தாமஸ் பெயின்.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும். - பிராங்க்ளின்.

பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன. - தாமஸ் புல்லர்.

பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை - டென்மார்க் பழமொழி.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை - பாரசீகப் பழமொழி.

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை - ஆஸ்திரேலியாப் பழமொழி.

* நீயா ! நானா ! நான் பார்க்கும் உலகம்

 

நீயா ! நானா !




ஆண்கள் பலசாலிகளா!
அனைத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில்லை. ஆண்களின் பலம் அவர்களது வருமானம்
அவர்களது பலவீனம் அவர்கள் அதனை செலவு செய்வது .வருமானம் அதிகமாக இருக்க கடன் கேட்பார்கள் வருமானம் குறைவாக இருப்பின் நட்பும் பாசமும் மற்றும் மற்ற தொல்லைகளும் அதிகமாகும் என்பதால் அதனை மறைத்தே வைப்பார்கள். அலைப்பாயும் மனதை மறைப்பார்கள். மறைவாக அத்தனையும் நடக்கும். hypocrite இறைபக்தி ஒழுக்கமானவன் நம்பிக்கையாளன் இத்தனையும் இவனிடம் இருப்பதாக காட்டிக் கொள்வான். தவறான செயல்களிலிருந்து தப்பிப்பதில் திறமையாளன்

பெண்கள் பலசாலிகளா!
அனைத்தையும் மற்றவர்களிடம் 'சூது வாது. தெரியாமல் பகிர்ந்துக் கொள்வார்கள். பின்பு மிகவும் வருந்துவார்கள்.
உணர்ச்சி வசப்பட்டவர்கள். அவர்கள் அதிகமாக பெறுவது அனைத்தும் தாய் வழி வந்தவை.எடுத்துச் செல்வது கணவன் வீட்டிலிருந்து. மனதில் இச்சை இருப்பினும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆண்கள் அவர்களை தொடர வேண்டும் ஆனால் ஆணுக்கு தான் அடங்கி நடப்பதாக காட்டுவதில் திறமை அதிகம் . நம்பிக்கை இருக்கும் அதில் சந்தேகமும் உள்ளடக்கம். கண்ணீர் அவர்கள் சொத்து .அந்த சொத்து பல சொத்துகளை பெற வழி வகுக்கும்
இரகசியம் காப்பது குறைவு. நடிக்கவும் தெரியும் நேர்மையாக இருக்கவும் தெரியும்.

பி . கு: அனைத்தும் உண்மையாகிவிட முடியாது . ஒருவரின் கருத்து மற்றவருடன் மாறுபடும் . விவாதத்தில் வெற்றி தோல்வி இல்லை . இது விவாதமும் அல்ல .ஒருவர் மனதை ஒருவர் விவாதத்தால் மாற்றுவது இயலாதது.
உடன் வாழ்வோர் கருத்து உடன்பட்டால் உலகம் இயங்காது . ஆய்வும் ,தத்துவமும் விஞ்ஞானத்திற்கு வழி வகுக்கும் .
இன்றைய அரசியல் நாளைய சரித்திரம் . இன்றைய ஆய்வு விஞ்ஞானத்தின் முடிவு. காயிலிருந்து பழம் வரும்.பழம் நேரடியாக வராது.
கணவனும் மனைவியும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும் தொடர்ந்து மகிழ்வாக வாழ்கிறார்கள்